உலக செவிலியர் தின விழா கொண்டாட்டம்
5/14/2022 12:06:24 AM
தர்மபுரி, மே 14: தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டையில், சுவாமி விவேகானந்தா செவிலியர் கல்லூரியில், உலக செவிலியர் தின விழா நடந்தது. விழாவை நிர்வாக அறங்காவலர் வசந்தராணி, செயலாளர் டாக்டர்.நாகராஜன், கல்லூரியின் முதல்வர் உமாபதி மற்றும் சிறப்பு விருந்தினர்கள் குத்துவிளக்கேற்றி, தொடங்கி வைத்தனர். பேராசிரியை பிரிசி மோனிகா வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக பத்மாவதி செவிலியர் கல்லூரி முதல்வர் செல்வி, தர்மபுரி ஓம் சக்தி செவிலியர் கல்லூரி முதல்வர் நஜிரா, தர்மபுரி பாஸ்போ செவிலியர் கல்லூரி முதல்வர் அமுதா, தர்மபுரி அன்னை செவிலியர் கல்லூரி முதல்வர் லஷ்மிபிரியா ஆகியோர் கலந்து கொண்டனர். தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நிலை 1 செவிலியர் கண்காணிப்பாளர் (ஓய்வு) சாந்தாமணி, கவுரவ விருந்தினராக கலந்து கொண்டார். அவரது சேவையை பாராட்டி, சிறந்த செவிலியர் விருதை, நிர்வாக அறங்காவலர் வசந்தராணி மற்றும் செயலாளர் டாக்டர்.நாகராஜன் ஆகியோர் வழங்கினர். விழாவையொட்டி, நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கும், செவிலியர் செயல்முறை பயிற்சிகளில் சிறந்து விளங்கிய மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடந்தது. பேராசிரியை செல்வி நன்றி கூறினார். ...
மேலும் செய்திகள்
மாவட்டம் முழுவதும் கோடை விடுமுறைக்கு பின் மீண்டும் பள்ளிகள் திறப்பு
தர்மபுரி மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் விநியோகம்
ஒகேனக்கல் காவிரியில் ஆண் சடலம் மீட்பு
சுவரில் துளையிட்டு வங்கியில் கொள்ளை முயற்சி செல்போன் டவரில் பதிவான எண்களை வைத்து விசாரணை
மாவட்டத்தில் குழந்தை திருமணம் இல்லாத நிலை உருவாக்க ஒத்துழைப்பு தரவேண்டும்
பயறு வகை பயிர்களில் விதைப்பண்ணை அமைத்தால் கூடுதல் லாபம் பெறலாம்
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;
மெக்சிகோவில் நூற்றுக்கணக்கான ஒரே பாலின ஜோடிகளுக்கு ஒன்றாக திருமணம்..!!
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!