எண்ணை ஆலை விரிவாக்க பணிக்கு கையகப்படுத்திய நிலத்திற்கு உரிய தொகை வழங்க வேண்டும்
5/14/2022 12:04:48 AM
நாகை,மே 14: நாகை மாவட்டம் நாகூரை அடுத்த பனங்குடியில் ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான சிபிசிஎல் பெட்ரோலிய கச்சா எண்ணை சுத்தகரிப்பு ஆலை இயங்கி வருகிறது.இந்த எண்ணை சுததகரிப்பு ஆலையை விரிவாக்கம் செய்ய பனங்குடி, கோபுராஜபுரம, நரிமணம் உத்தமசோழபுரம், முட்டம் ஆகிய ஊராட்சிகளில் 622 ஏக்கர் நிலம் எடுக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் எண்ணை சுத்தகரிப்பு ஆலை விரிவாக்கத்திற்கு எடுக்கப்படும் நிலத்தினை குறைந்த விலைக்கு கையகப்படுத்துவதால் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதையடுத்த நிலத்தின் விலை மதிப்பை உயர்த்திட கோரி நாகை மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்க விவசாய சங்கத்தை சேர்ந்த ஈசன்முருகேன் தலைமையில் விவசாயிகள் பேரணியாக கலெக்டர் அலுவலகம் வந்தனர். இவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் 5 பேர் மட்டும் மனு கொடுக்க அனுமதித்தனர். இதையடுத்து விவசாயிகள் கொண்டு வந்த 150க்கும் மேற்பட்ட மனுக்களை விவசாய சங்க பிரதிகள் மாவட்ட வருவாய் அலுவலர் சகிலாவிடம் வழங்கினார்.
மேலும் செய்திகள்
நாகை மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் ஆய்வு
வேதாரண்யத்தில் வேளாண் வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம்
கோயில்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும்
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் புதிதாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமையும் இடம்
அனைவருக்கும் முறையாக கிடைக்க ஒத்துழைக்காதவர்கள்; வீடுகளில் குடிநீர் குழாய் இணைப்பு துண்டிக்கப்படும்: பேரூராட்சி செயல் அலுவலர் எச்சரிக்கை
காரைக்கால் கலெக்டராக மொஹமத் மன்சூர் நியமனம்
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!