காரைக்கால் முத்துமாரி நாகத்தம்மன் கோயில் கும்பாபிஷேகம்
5/14/2022 12:04:43 AM
காரைக்கால்,மே 14: காரைக்கால் முத்துமாரி நாகத்தம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.காரைக்கால் நகர பகுதியில் உள்ள முத்துமாரி நாகத்தம்மன் கோயிலுக்கு குடமுழுக்கு செய்யப்பட்டு பல ஆண்டுகள் ஆன நிலையில், கோயிலை புனரமைத்து மீண்டும் குடமுழுக்கு செய்ய அப்பகுதி மக்கள் முடிவு செய்தனர். இதையடுத்து திருப்பணிகள் நிறைவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து கும்பாபிஷேகத்திற்கான முதல் கால யாக பூஜை தொடங்கியது. நேற்று காலையுடன் இரண்டு கால யாக பூஜைகள் நிறைவு பெற்றது. பின்னர் கடங்கள் புறப்பாடாகி, காலை 10 மணியளவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
மேலும் செய்திகள்
நாகை மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் ஆய்வு
வேதாரண்யத்தில் வேளாண் வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம்
கோயில்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும்
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் புதிதாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமையும் இடம்
அனைவருக்கும் முறையாக கிடைக்க ஒத்துழைக்காதவர்கள்; வீடுகளில் குடிநீர் குழாய் இணைப்பு துண்டிக்கப்படும்: பேரூராட்சி செயல் அலுவலர் எச்சரிக்கை
காரைக்கால் கலெக்டராக மொஹமத் மன்சூர் நியமனம்
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!