கரூர் டவுன் காவல் நிலையத்தில் குவிந்த திருநங்கைகள்
5/14/2022 12:03:59 AM
கரூர், மே 14: கரூர் டவுன் காவல் நிலையத்தில் 10க்கும் மேற்பட்ட திருநங்கைகள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கரூர் பேருந்து நிலையத்தில் திருநங்கைகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் 2 அரசு பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது. இந்த பிரச்னை சம்பந்தமாக கரூர் டவுன் காவல் நிலையத்தில் 5க்கும் மேற்பட்ட திருநங்கைகள் மீது வழக்கு பதியப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று மாலை 4 மணியளவில் கரூர் டவுன் காவல் நிலையத்துக்கு 10க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வந்தனர். இவர்களில் இரண்டு பேர் உடலில் மண்ணெண்ணையை ஊற்றிய நிலையில் வந்தனர்.காவல் நிலையம் வந்த அவர்கள், போலீசார்களிடம் எங்களிடம் விசாரணை மேற்கொள்வதால் பல்வேறு பாதிப்புகளை சந்திக்கிறோம் என முறையிட்டனர். அங்கிருந்த போலீசார், அவர்களிடம் பேசி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதனால், கரூர் டவுன் காவல் நிலைய வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் செய்திகள்
வெண்ணைமலை சேரன் பள்ளியில் போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு
அரவக்குறிச்சி, பள்ளபட்டி பகுதியில் செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு
நஞ்சை புகளூர் அக்ரஹாரத்தில் ஆவணி அவிட்டத்தையொட்டி பூணூல் மாற்றும் நிகழ்ச்சி
அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் பவுர்ணமி கிரிவலம் ரோப் காரை பயன்பாட்டிற்கு விட பக்தர்கள் கோரிக்கை
கரூர் பெரிய குளத்துப்பாளையம் வாரச்சந்தையில் சேதமடைந்த கடைகளை சீரமைக்க கோரிக்கை
பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் சிவாலயத்தில் பட்டினத்தார் குருபூஜை
மத்தியதரைக் கடலில் குடியேறியவர்கள் பத்திரமாக மீட்பு..!!
ஆர்டிமிஸ் 1 திட்டத்துக்கான ஒத்திகையை தொடங்கியது நாசா
கடலுக்கு அடியில் அதிசய நகரம்: அழகிய ரோமன் நகரின் அற்புத காட்சி..!!
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...