புகளூர் நகராட்சி பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற இந்திய கம்யூ. வலியுறுத்தல்
5/14/2022 12:03:46 AM
வேலாயுதம்பாளையம், மே 14: வேலாயுதம்பாளையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் கட்சியின் ஏழாவது ஒன்றிய மாநாடு நடைபெற்றது.மாநாட்டில் மாநில செயற்குழு உறுப்பினர் முன்னாள் எம்எல்ஏ பெரியசாமி, சிபிஐ மாவட்ட செயலாளர் ரத்தினம், மாவட்ட துணைச் செயலாளர் சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டு மாநாட்டில் சிறப்புரையாற்றினார்.மாநாட்டில், மலைவீதி கந்தம்பாளையம் முதல் புகளூர் வரை சாலையில் சென்டர் மீடியன் அமைத்து மின் விளக்கு பொருத்த வேண்டும். புகழூர் நகராட்சி வள்ளுவர்நகர் தெற்கு பகுதியில் தேங்கி நிற்கும் சாக்கடை நீரை பாதாள சாக்கடை அமைத்து கொசுத்தொல்லையில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க வேண்டும்.
மலைவீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பொது மக்களுக்கு இடையூறு இல்லாமல் நகராட்சி நிர்வாகம் வழிவகை செய்து கொடுக்க வேண்டும். தோட்டக்குறிச்சியிலிருந்து கந்தம்பாளையம் வரை நூற்றுக்கணக்கான ஆடுகள் ரோட்டில் குறுக்கும், நெடுக்குமாக மேய்ந்து கொண்டிருக்கிறது.இதனால் ஏராளமான விபத்துகள் நடந்து வருகின்றன. இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட, ஒன்றிய, கிளை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
வெண்ணைமலை சேரன் பள்ளியில் போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு
அரவக்குறிச்சி, பள்ளபட்டி பகுதியில் செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு
நஞ்சை புகளூர் அக்ரஹாரத்தில் ஆவணி அவிட்டத்தையொட்டி பூணூல் மாற்றும் நிகழ்ச்சி
அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் பவுர்ணமி கிரிவலம் ரோப் காரை பயன்பாட்டிற்கு விட பக்தர்கள் கோரிக்கை
கரூர் பெரிய குளத்துப்பாளையம் வாரச்சந்தையில் சேதமடைந்த கடைகளை சீரமைக்க கோரிக்கை
பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் சிவாலயத்தில் பட்டினத்தார் குருபூஜை
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!