சென்னை மாநகராட்சியில் மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த ₹588 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.
5/14/2022 12:03:24 AM
சென்னை: சென்னை மாநகராட்சி மற்றும் பொது சுகாதாரத் துறை இணைந்து மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளிலும் புதிய நகர்ப்புற மருத்துவ நிலையங்கள் அமைப்பது குறித்து மாமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: ஒவ்வொரு நகர்ப்புற மருத்துவ நிலையங்களும் ₹35.45 லட்சம் மதிப்பில் அமைய உள்ளது. சென்னையில் 200 இடங்களில் இந்த நகர்புற மருத்துவ நிலையங்கள் மிக விரைவில் அமைக்கப்படும். சென்னை மாநகராட்சியில் மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த ₹588 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் செய்திகள்
கள்ளக்காதலியால் தகராறு நண்பரை கொன்ற வாலிபர் கைது
மேனேஜரை எரிக்க முயன்ற தூய்மை பணியாளர் கைது
சென்னையில் 27,500 அடுக்குமாடி குடியிருப்புகள் வாழ தகுதியற்றவை 15 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் 2,400 கோடியில் கட்ட நடவடிக்கை: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்
திடீர் தீ விபத்தில் கார் எரிந்து சேதம்
போலீசாருக்கு ஆக்சிமீட்டர்
வேளச்சேரி மயானம் மூடல்
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!
நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .
50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!