தம்மம்பட்டி பஸ் நிலையத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் ஆய்வு
5/13/2022 6:08:03 AM
தம்மம்பட்டி, மே 13: தம்மம்பட்டிக்கு பர்மிட் இருந்தும் சில தனியார் பஸ்கள் வருவதில்லை. மேலும் சில தனியார் பேருந்துகள் டிரிப்புகளை இயக்குவதில்லை. இதுகுறித்து, போக்குவரத்து துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், ஆத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலர் ரகுபதி உத்தரவின்பேரில், மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் தம்மம்பட்டி பஸ் நிலையத்தில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில், தனியார் பேருந்து ஒன்றுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டது. பர்மிட் இருந்தும் இயக்கப்படாத தனியார் பஸ்களுக்கு எச்சரிக்கை விடுத்து நோட்டீஸ் அனுப்பப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன் பொருத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்தனர்.
மேலும் செய்திகள்
கோயில் கும்பாபிஷேக விழாவில் 3 மூதாட்டிகளிடம் 15 பவுன் நகை பறிப்பு
ஆத்தூர் உயர்மட்ட பாலம் பணிக்காக ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு
கெங்கவல்லி அருகே மின்கசிவால் குடிசை வீட்டில் தீ விபத்து
கரியகோயில் அணையில் இருந்து பழைய பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு
அரசுப்பள்ளியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மை பணிகளை கலெக்டர் திடீர் ஆய்வு
நாமகிரிப்பேட்டை அருகே 7ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!