ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவன சார்பில் சிறப்பு வீட்டு கடன் முகாம்
5/13/2022 5:58:52 AM
திருப்பூர், மே 13: ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனம் சார்பில் சிறப்பு வீட்டு கடன் முகாம் திருப்பூரில் நடந்தது. ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தின் திருப்பூர் கிளை மேலாளர் தட்சிணாமூர்த்தி தலைமை வகித்து, கடன் அனுமதி கடிதங்களை வழங்கினார். வங்கி பணியாளர்கள் சத்தியராஜ், செந்தில்குமார், மணிகண்டன், பாரதிராஜா, யுவராஜ், தினேஷ்குமார் கந்தசாமி ஆகியோர் முகாம் ஏற்பாடுகளை செய்திருந்தனர். இம்முகாம் குறித்து திருப்பூர் கிளை மேலாளர் தட்சிணாமூர்த்தி கூறுகையில், ‘‘அனுமதிபெற்ற வீட்டு மனைகள் வாங்க, வீட்டு கட்டிட, வீடு மற்றும் அடுக்குமாடி கட்டடம் வாங்க, வீடு பழுது பார்க்க, வணிக வளாகம், திருமண மண்டபம், வர்த்தக கட்டிடம் கட்டிட மற்றும் பிற வங்கி, பிற நிதி நிறுவனத்தில் அதிக வட்டியில் நிலுவையில் உள்ள வீட்டு கடனை மாற்றிக் கொள்ள சிறப்பு முகாமில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
மேலும்,சம்பளதாரர்களுக்கு, விழாக்கால சலுகையாக ரெப்கோ பெஸ்டிவல் பைனான்ஸ் எனும் பெயரில் 7.15 சதவீத வட்டி விகிதம் முதல் கடன்கள் வழங்கப்படுகின்றன. சிறப்பு சலுகையாக 0.50 சதவிகிதம் மட்டும் செயல்முறை கட்டணம் மற்றும் நிர்வாக கட்டணம் தள்ளுபடி செய்யப்படுகின்றது. மேலும் விபரங்கள் அறிய 94443 94976, 0421 - 2239202, 99760 09400, 73731 10130 என்ற எண்களில் அழைக்கலாம்’’ என்றார்.
மேலும் செய்திகள்
பின்னலாடை நிறுவனங்களுக்கு வங்கிகள் கூடுதல் கடன் வழங்க வேண்டும் ஏற்றுமதியாளர்கள் சங்கம் கோரிக்கை
உடுமலை திருப்பதி கோயிலில் ஸ்ரீநரசிம்மர் ஜெயந்தி விழா
பெண்ணிடம் நகை பறித்த வாலிபர்கள் கைது
உடுமலையில் இன்று மின்தடை
அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்
சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் களைகட்டிய தேயிலை பூங்கா
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!
நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .
50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!