சாலை விபத்தில் கல்லூரி மாணவர் பலி
5/13/2022 5:56:36 AM
மொடக்குறிச்சி,மே13: கொடுமுடி அருகே உள்ள வெங்கம்பூர்,கல்வெட்டுப்பாளையம் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (52) கூலித் தொழிலாளி. இவரது மகன் மனோஜ்குமார் (21). ஈரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். ஊஞ்சலூர் அருகே உள்ள காரணாம்பாளையம் பகுதியைச் சேரந்த சதாசிவம் என்பவரது மகன் தர் (20) ஆகிய இருவரும் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் ஊஞ்சலூர் நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தனர். வண்டியை தர் ஓட்டி சென்றார். கணபதிபாளையம் அருகே செல்லும்போது இவர்களின் வண்டிக்கு பின்னால் வந்து கொண்டிருந்த கார் எதிர்பாராத விதமாக பைக் மீது மோதியது. பைக்கில் பின்னால் அமர்ந்திருந்த மனோஜ்குமார் படுகாயம் அடைந்தார். தருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அருகிலிருந்தவர்கள் இருவரையும் மீட்டு ஆம்லன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் மனோஜ்குமார் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர். தர் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் செய்திகள்
பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம்
அழகுநாச்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
திருப்பூரில் ஜவுளிக்கடை உரிமையாளரின் வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகை, ரூ.1.50 லட்சம் திருட்டு
நாச்சிபாளையத்தில் சீரான குடிநீர் விநியோகம் கோரி காலிக் குடங்களுடன் மக்கள் மறியல்
ஊருக்குள் யானை வருவதை முன்கூட்டியே அறிய உதவும் கருவி பொறுத்தும் பணி தீவிரம்
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!