நாச்சாரம்மன் கோயில் தேரோட்டம்
5/12/2022 5:58:15 AM
குன்னம், மே 12: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள பெரிய வெண்மணி கிராமத்தில் உள்ள நாச்சாரம்மன், மாணிக்க அம்மன், மாக்காயிஅம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் கடந்த 3ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அன்று முதல் தினமும் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. அதை தொடர்ந்து நேற்று காலை நாச்சாரம்மனுக்கு மஞ்சள், பன்னீர், தயிர், சந்தனம் உட்பட 18 வகையான முலிகை பொருட்களால் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து நாச்சாரம்மன், மாணிக்க அம்மன், மாக்காயி அம்மன்களுக்கு மலர்களால் சிறப்பான அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து வாணவேடிக்கையுடன் கிராம முக்கியஸ்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து இந்த தேரோட்டத்தில் கொளப்பாடி, சின்னவெண்மணி, புதுவேட்டகுடி, காடூர், நல்லறிக்கை, வேப்பூர் உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 2,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை கிராம முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர். குன்னம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மேலும் செய்திகள்
நெல்அறுவடை முடிவடையும் வ ரை நெல் கொள்முதல் நி லையங்களை திறந்து வை த்து கொள்முதல் செய்ய வேண்டும்: விவசாயிகள் சங் கம் வேண்டுகோள்
அரியலூரில் இன்று நடக்கிறது திமுக 15வது ஒன்றிய தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்
ெபரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் விதை தரத்தை அறிந்து விவசாயிகள் பயிர் சாகுபடி செய்ய வேண்டும்: வேளாண்மை அலுவலர் வேண்டுகோள்
தா.பழூர் மகா முத்துமாரியம்மன் கோயில் திருவிழா
குண்டும், குழியுமான சாலை கரூரில் முதன்முறையாக துவக்கம்: கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்; அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார்
மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!