பாடாலூர் மேற்கு கிராமத்தில் பொது பாதையை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்
5/12/2022 5:58:09 AM
பெரம்பலூர், மே 12: பெரம்பலூர் அருகே பாடாலூர் தேவேந்திரகுல வேளாளர் சமுதாய மக்கள், கிராம முக்கியஸ்தர் மணிவேல் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் அளித்துள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது: பாடாலூர் மேற்கு கிராமத்தில் செல்வமுத்து மாரியம்மன் கோயில் 2 இடங்களில் உள்ளது. இதில் அனைவரும் அங்கு சென்று வழிபட்டு வருகிறோம். அதில் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் உள்ள மாரியம்மன் கோயிலில் இருந்து செக்கடிமேடு கிராம நிர்வாக அலுவலகம் வழியாக உள்ள பாடாலூர்-தெரணி பொது தார் சாலை வழியாக செல்ல அனுமதிக்க வேண்டும். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பொது தார்சாலையில் சாமி ஊர்வலம் செல்ல முயன்ற போதும் கூட அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தையின் போது சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பொதுப்பாதையை யாரும் தடுக்கக்கூடாது என உத்தரவிட்டபோதும் கூட எங்களது நியாயமான கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளது. எனவே பாடாலூரில் உள்ள பொது தார் சாலையை அனைத்து சமூகத்தினரும் அனைத்து தேவைகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம் என உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
நெல்அறுவடை முடிவடையும் வ ரை நெல் கொள்முதல் நி லையங்களை திறந்து வை த்து கொள்முதல் செய்ய வேண்டும்: விவசாயிகள் சங் கம் வேண்டுகோள்
அரியலூரில் இன்று நடக்கிறது திமுக 15வது ஒன்றிய தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்
ெபரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் விதை தரத்தை அறிந்து விவசாயிகள் பயிர் சாகுபடி செய்ய வேண்டும்: வேளாண்மை அலுவலர் வேண்டுகோள்
தா.பழூர் மகா முத்துமாரியம்மன் கோயில் திருவிழா
குண்டும், குழியுமான சாலை கரூரில் முதன்முறையாக துவக்கம்: கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்; அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார்
மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!