வேலாயுதம்பாளையம் அருகே பைக்குகள் விபத்தில் ஒருவர் படுகாயம்
5/10/2022 4:18:23 AM
வேலாயுதம்பாளையம், மே 10: வேலாயுதம்பாளையம் அருகே இரண்டு பைக்குகள் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயமடைந்தார். வேலாயுதம்பாளையம் அருகே சேமங்கி பெரியார்நகர் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் (43). இவர் தனது ஸ்கூட்டரில் நொய்யல் சென்று விட்டு மீண்டும் தனது வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது சேமங்கி அருகே வந்தபோது வேலாயுதம்பாளையத்தில் இருந்து நொய்யல் நோக்கி எதிர்திசையில் பைக்கில் வந்த திருப்பூர் பரமேஸ்வரிநகர் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரது மகன் பிரபு (27) என்பவர் தங்கவேல் ஓட்டி வந்த ஸ்கூட்டர் மீது மோதினார். இதில் தங்கவேல் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கரூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நெப்போலியன் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
மேலும் செய்திகள்
வெண்ணைமலை சேரன் பள்ளியில் போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு
அரவக்குறிச்சி, பள்ளபட்டி பகுதியில் செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு
நஞ்சை புகளூர் அக்ரஹாரத்தில் ஆவணி அவிட்டத்தையொட்டி பூணூல் மாற்றும் நிகழ்ச்சி
அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் பவுர்ணமி கிரிவலம் ரோப் காரை பயன்பாட்டிற்கு விட பக்தர்கள் கோரிக்கை
கரூர் பெரிய குளத்துப்பாளையம் வாரச்சந்தையில் சேதமடைந்த கடைகளை சீரமைக்க கோரிக்கை
பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் சிவாலயத்தில் பட்டினத்தார் குருபூஜை
மத்தியதரைக் கடலில் குடியேறியவர்கள் பத்திரமாக மீட்பு..!!
ஆர்டிமிஸ் 1 திட்டத்துக்கான ஒத்திகையை தொடங்கியது நாசா
கடலுக்கு அடியில் அதிசய நகரம்: அழகிய ரோமன் நகரின் அற்புத காட்சி..!!
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...