பாலத்திலிருந்து காவிரியில் குதித்த பெண் மீட்பு
5/3/2022 6:18:25 AM
பள்ளிபாளையம், மே 3: குடும்ப பிரச்னை காரணமாக காவிரி பாலத்திலிருந்து ஆற்றுக்குள் குதித்த பெண்ணை மீனவர்கள் மீட்டு, போலீசாரிடம் ஒப்படைத்தனர். பள்ளிபாளையம் காவிரி ஆற்று புதிய பாலத்தில், நேற்று நடந்து சென்று கொண்டிருந்த 45வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், தடுப்பு சுவரை தாண்டி காவிரி ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். ஆற்று நீரில் மூழ்காமல் தத்தளித்த அவரை, மீனவர் ஒருவர் பரிசலில் சென்று காப்பாற்றி கரை சேர்த்து பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அவரிடம் நடத்திய விசாரணையில், பள்ளிபாளையம் அடுத்துள்ள ஆவத்திபாளையத்தை சேர்ந்த விசைத்தறி தொழிலாளி பாலகிருஷ்ணன் மனைவி ராதா என்பது தெரியவந்தது. மகளிர் சுய உதவி குழுக்கள் பலவற்றில் கடன் வாங்கி, குடும்ப செலவை சமாளித்ததால், கடன் தொல்லை ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட குடும்ப பிரச்னையால் மனமுடைந்து, அவர் தற்கொலைக்கு முயன்றதாக தெரியவந்தது. மீட்கப்பட்ட பெண்ணை போலீசார் சிகிச்சைக்காக, ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
மேலும் செய்திகள்
ஓடும் ரயிலில் இருந்து குதித்த ரிக் அதிபர் பலி
15 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
வாலிபரை ஓட, ஓட விரட்டி வெட்டிய ரவுடி
வீடு புகுந்து நகை, பணம் கொள்ளை
ஒரே மாதத்தில் 104 சுகப்பிரசவங்கள் கவனம் ஈர்க்கும் நகர்ப்புற சுகாதார நிலையங்கள்
தனியார் மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகை
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!