வீரபாண்டி திருவிழா ஆலோசனை கூட்டம்
5/3/2022 6:14:03 AM
தேனி, மே 3: தேனி அருகே வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா வருகிற மே 10ம் தேதி முதல் மே 17ம் தேதி வரை நடக்க உள்ளது. விழாவிற்கான முன்னேற்பாட்டு ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் முரளீதரன் தலைமை வகித்தார். எஸ்.பி பிரவீன் உமேஸ் டோங்கரே, மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தண்டபாணி, இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் பாரதி, பெரியகுளம் சப்.கலெக்டர் ரிசப் மற்றும் பல்வேறுத் துறைகளின் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலெக்டர் முரளீதரன் பேசும்போது, திருவிழாவில் தேரின் எடைக்கு ஏற்றார்போல மின்சாரம் பாயாத பொருள்களைக் கொண்டு தேரின் வடம் தயாரிக்க வேண்டும், தேரோடும் சாலைகளை சீரமைக்க வேண்டும். தீயணைப்பு வாகனங்கள் போதிய அளவில் இருப்பு வைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும் செய்திகள்
மழைநீர் வடிகால்களில் அடைப்பு நீக்கும் பணி
வழிப்பறி செய்த சகோதரர்கள் கைது
சுதந்திர தின பவளவிழாவை முன்னிட்டு மேலூரில் காங்கிரசார் நடைபயணம்
மதுரை அருகே விபத்தில் ஓய்வு தலைமையாசிரியர் பலி லாரி டிரைவர் கைது
வீடு புகுந்து 8 பவுன் திருட்டு
வரதட்சணை புகாரில் கணவர் கைது
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!