இடி, மின்னலுடன் நள்ளிரவில் திடீர் மழை: காஞ்சி மக்கள் மகிழ்ச்சி
5/3/2022 12:47:33 AM
காஞ்சிபுரம்: கோடை வெயில் சுட்டெரித்து வந்த வேளையில் காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீரென மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். கோடை காலம் தொடங்கி, தமிழகத்திலேயே அதிக அளவாக காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் 111 டிகிரிக்கும் மேல் வெப்பநிலை தொடர்ந்து வந்ததால் குழந்தைகள், முதியவர்கள் என அனைத்து தரப்பு பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில், திடீரென இடி மின்னலுடன் யாரும் எதிர்பாராத வகையில் கனமழை பெய்தது.
காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஓரிக்கை, தாமல், பாலுசெட்டிசத்திரம், கீழ்அம்பி, சிறுகாவேரிபாக்கம், வெள்ளைகேட் ஆகிய பகுதிகளில் மழைநீர், சாலையில் வெள்ளமாக ஓடியது. திடீர் மழையால், சாலையில் மழை நீர் தேங்கி, கோடை வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. இதனால், பொதுமக்கள் நிம்மதியாக மகிழ்ச்சியுடன் தூங்கினார்கள்.
மேலும் செய்திகள்
கல்வி அறக்கட்டளை சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை
கருங்குழி பேரூராட்சியில் ரூ.1.35 கோடி மதிப்பீட்டில் நவீன ஏரியூட்டும் தகன மேடை
திருமாவளவன் பிறந்த நாள் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்
திருப்போரூர் ஓஎம்ஆர் சாலையில் உள்ள பொது துறை வங்கியில் கூடுதல் ஊழியர்களை நியக்க வேண்டும்: வாடிக்கையாளர்கள் கோரிக்கை
முடி திருத்துவோர் சங்கம் சார்பில் அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு நிதியுதவி
செய்யூர் - புதுச்சேரிக்கு நேரடி அரசு பஸ் சேவை: பொதுமக்கள் கோரிக்கை
மத்தியதரைக் கடலில் குடியேறியவர்கள் பத்திரமாக மீட்பு..!!
ஆர்டிமிஸ் 1 திட்டத்துக்கான ஒத்திகையை தொடங்கியது நாசா
கடலுக்கு அடியில் அதிசய நகரம்: அழகிய ரோமன் நகரின் அற்புத காட்சி..!!
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...