அரூர் மண்டிக்கு புளியங்கொட்டை வரத்து அதிகரிப்பு
4/28/2022 3:17:29 AM
அரூர், ஏப்.28:தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புளி விளைச்சல் அதிகமாக உள்ளது. மாநிலத்தின் 50 சதவீத புளி தேவையை இந்த இரு மாவட்டங்களே பூர்த்தி செய்கிறது. மார்ச், ஏப்ரல் மாதங்களில் புளி அறுவடை சீசன் டங்குகிறது.புளிய மரத்தின் இலை, பழம், பட்டை, அனைத்துமே மருத்துவத்திற்கு பயன்படுகிறது. புளியங்கொட்டையில் 63 சதவீத மாவு பொருட்கள் உள்ளதால், புளியங்கொட்டையிலிருந்து பொடி எடுக்கப்பட்டு, துணி மெருகூட்டவும், சணல் நூல், செயற்கை நூல் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது. இதன் எண்ணெய் வார்னீஷ், பெயிண்ட் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. மாட்டு தீவனமாகவும் பயன்படுத்தப்படுகிறது.முன்பு எதற்கும் பயன்படுத்தாமல் உரமாக்க குப்பைகளில் கொட்டப்பட்டு வந்த புளியங்கொட்டையிலிருந்து மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிக்கப்படுவதால், இதன் விலை அதிகரித்துள்ளது. தற்போது கிலோ ரூ15 வரை விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் செய்திகள்
மாவட்டம் முழுவதும் கோடை விடுமுறைக்கு பின் மீண்டும் பள்ளிகள் திறப்பு
தர்மபுரி மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் விநியோகம்
ஒகேனக்கல் காவிரியில் ஆண் சடலம் மீட்பு
சுவரில் துளையிட்டு வங்கியில் கொள்ளை முயற்சி செல்போன் டவரில் பதிவான எண்களை வைத்து விசாரணை
மாவட்டத்தில் குழந்தை திருமணம் இல்லாத நிலை உருவாக்க ஒத்துழைப்பு தரவேண்டும்
பயறு வகை பயிர்களில் விதைப்பண்ணை அமைத்தால் கூடுதல் லாபம் பெறலாம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;
மெக்சிகோவில் நூற்றுக்கணக்கான ஒரே பாலின ஜோடிகளுக்கு ஒன்றாக திருமணம்..!!
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!