நுண்ணீர் பாசன கருவிக்கு 100 சதவீத மானியம்
4/28/2022 2:59:12 AM
திருச்சி, ஏப்.28:நுண்ணீர் பாசன கருவிக்கு 100 சதவீதம் மானியம் வழங்கப்பட உள்ளது என்று தோட்டக்கலை துணை இயக்குனர் விமலா தெரிவித்துள்ளார். தாட்கோ பாஸ்ட்டிராக் திட்டத்தின் மூலம் மின் இணைப்பு பெற்ற விவசாயிகள் தோட்டக்கலை துறையின் கீழ் நுண்ணீர் பாசன கருவிகள் பெற விண்ணப்பிக்கலாம். ஒரு எக்டேர் வரையுள்ள குறு, 2 எக்டேர் வரையுள்ள சிறு விவசாயிகளுக்கு 100சதவீத மானியம், 5 எக்டேர் வரையுள்ள இதர விவசாயிகளுக்கு 75சதவீத மானியத்தில் கருவிகள் வழங்கப்படும். குத்தகை நிலமாக இருந்தால் 7 ஆண்டுகளுக்கு பதிவு செய்திருக்க வேண்டும், அரசு அங்கீகரித்த நிறுவனங்களின் மூலம் நுண்ணீர் பாசனம் அமைத்து கொள்ளலாம். பயிரின் இடைவெளிக்கு தகுந்தவாறு மானியம் வழங்கப்படும். அடங்களில் தோட்டக்கலை பயிர்களை பதிவு செய்து ரேஷன் அட்டை, கம்ப்யூட்டர் சிட்டா, நில வரைபடம், சிறு, குறு விவசாயிக்கான தாசில்தார் சான்றுடன் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம் என துணை இயக்குநர் விமலா தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
குட்கா விற்ற 2 பேர் கைது
வெடிகுண்டு வீசிய வழக்கு திருச்சி கோர்ட்டில் வாலிபர் சரண்
கஞ்சா விற்றவர் கைது
சுதந்திர தினத்தையொட்டி பொலிவுபெறும் காந்திசிலை
தா.பேட்டை பகுதியில் 2000 பனை மரங்கள் நட விதை வழங்கல்
தொட்டியத்தில் மதுரை காளியம்மனுக்கு வளையல் அலங்காரம்
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!