விதை பரிசோதனை நிலையத்தில் ஆய்வு
4/28/2022 2:22:21 AM
ஈரோடு, ஏப்.28: ஈரோடு விதை பரிசோதனை நிலையத்தில் கோவை விதை பரிசோதனை அலுவலர் நிர்மலா திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஈரோடு சத்தி ரோடு வீரபத்திர வீதியில் உள்ள விதை பரிசோதனை நிலையத்தில் கோவை மாவட்ட விதை பரிசோதனை அலுவலர் நிர்மலா திடீர் ஆய்வு மேற்கொண்டார். அவர், ஆய்வகத்தில் பரிசோதனைக்கு வரும் மாதிரிகள் விதைச்சட்டம் 1966ன்படி ஆய்வு செய்யப்படுகிறதா?, காப்பு விதை மாதிரிகள் உரிய வெப்பநிலை மற்றும் ஈரபதத்துடன் பராமரிக்கப்படுகிறதா? என்பதையும் உறுதி செய்தார். தொடர்ந்து, விதை முளைப்புத்திறன் அறையில் விதை மாதிரிகளின் முளைப்புதிறனை பரிசோதித்து, பிற ரக கலப்பு என்பது ஒரே பயிரின் வேறு ரக விதைகள் கலந்திருந்தால் விளைபொருளின் தரம் குறைந்து நஷ்டம் ஏற்படும் எனவே, பிற ரக கலப்பு விதைகளை கண்டறிவது குறித்து தொழில்நுட்ப அறிவுரைகளையும் வழங்கினார். மேலும், பரிசோதனையின்போது அனைத்து காரணிகளையும் கருத்தில் கொண்டு விதை பரிசோதனை நடைமுறைகளை முறையாக பின்பற்றி பணிகளை துரிதமாக முடித்து உடனுக்குடன் முடிவுகளை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார். ஆய்வின்போது, விதை பரிசோதனை நிலைய வேளாண் அலுவலர்கள் சாந்தி, கோகிலீஸ்வரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மேலும் செய்திகள்
சட்டவிரோதமாக வெடிபொருட்கள் பதுக்கினால் தகவல் தெரிவிக்கலாம் ஈரோடு போலீசார் வலியுறுத்தல்
கொரோனா காரணமாக ரத்தான 1ம் தேதி முதல் ஓய்வூதியர் நேர்காணல் நடத்த முடிவு
கஞ்சா விற்ற 4 பேர் கைது
தீ குளித்து மூதாட்டி பலி
கோபி மொடச்சூரில்தாய் சேய் நலவிடுதி திறப்பு
குருப்பநாயக்கன்பாளையம் ஊராட்சியில் வாழ்ந்து காட்டுவோம் திட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!