வணிக வரித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
4/28/2022 2:21:18 AM
ஈரோடு, ஏப்.28: தமிழ்நாடு வணிக வரி சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில பொருளாளர் விஜி தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர்கள் வாசுகிராணி, ராகவன், வெங்கடேசன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில், கடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்ட 1,000 துணை மாநில வரி அலுவலர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். அலுவலர்கள், அதிகாரிகளை இடமாற்றம் செய்யும்போது வழக்கமான கவுன்சலிங் முறையில் மட்டுமே இடமாற்றம் செய்ய வேண்டும்.
கோட்ட அளவிலான மாறுதல்களைக் கைவிட வேண்டும். காதி துறையில் இருந்து வணிக வரித் துறைக்கு வந்தவர்களுக்கு சிறப்பு நிலை பதவி வழங்கியதை திரும்ப பெற்று, அவர்களது சம்பளத்தை திரும்பப் பெறும் நடைமுறையைக் கைவிட வேண்டும். 25 ஆண்டுக்கும் மேலாக பணியாற்றியவர்களுக்கான பதவி உயர்வுகளை வழங்க வேண்டும். பணி நியமனம், இடமாற்றம் உள்ளிட்டவைகளில் தேவையற்ற கால தாமதங்களைத் தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், திரளான வணகவரித்துறை ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
மேலும் செய்திகள்
சட்டவிரோதமாக வெடிபொருட்கள் பதுக்கினால் தகவல் தெரிவிக்கலாம் ஈரோடு போலீசார் வலியுறுத்தல்
கொரோனா காரணமாக ரத்தான 1ம் தேதி முதல் ஓய்வூதியர் நேர்காணல் நடத்த முடிவு
கஞ்சா விற்ற 4 பேர் கைது
தீ குளித்து மூதாட்டி பலி
கோபி மொடச்சூரில்தாய் சேய் நலவிடுதி திறப்பு
குருப்பநாயக்கன்பாளையம் ஊராட்சியில் வாழ்ந்து காட்டுவோம் திட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!