இரணியம்மங்கலம் ஊராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட முகாம்
4/28/2022 12:42:30 AM
குளித்தலை, ஏப்.28: குளித்தலை அடுத்த இரணியம் மங்கலம் ஊராட்சியில வட்டார அளவிலான கலைஞரின் வரும்முன் காப்போம் திட்ட முகாம் வளையப்பட்டி தனம் உதவி அரசுப்பள்ளியில் நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் ரம்யா சரவணன் தலைமை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சிவகுமார் முன்னிலை வகித்தார். முகாமை துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் தொழுநோய் துறை டாக்டர் சாந்தி தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கினார் முகாமில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சென்னை மருத்துவ துறை கூடுதல் இயக்குனர் முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்தார் இம்முகாமில் தாய் சேய் நலம், சிறப்பு பொது மருத்துவம், எலும்பு மற்றும் மூட்டு சிகிச்சை, காது-மூக்கு-தொண்டை சிகிச்சை, பல் மருத்துவம், தோல் நோய் சிகிச்சை, மனநல மருத்துவம், கண் மருத்துவம், பரிசோதனை கொரோனோ பரிசோதனை தடுப்பூசி உள்ளிட்ட அனைத்து பரிசோதனைகளுக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். முகாமில் 1063 பயனாளிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். முகாமிற்கான ஏற்பாட்டினை வட்டார அளவிலான மருத்துவர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள், செவிலியர்கள் செய்திருந்தனர்.
மேலும் செய்திகள்
வெண்ணைமலை சேரன் பள்ளியில் போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு
அரவக்குறிச்சி, பள்ளபட்டி பகுதியில் செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு
நஞ்சை புகளூர் அக்ரஹாரத்தில் ஆவணி அவிட்டத்தையொட்டி பூணூல் மாற்றும் நிகழ்ச்சி
அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் பவுர்ணமி கிரிவலம் ரோப் காரை பயன்பாட்டிற்கு விட பக்தர்கள் கோரிக்கை
கரூர் பெரிய குளத்துப்பாளையம் வாரச்சந்தையில் சேதமடைந்த கடைகளை சீரமைக்க கோரிக்கை
பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் சிவாலயத்தில் பட்டினத்தார் குருபூஜை
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!