காரைக்கால் அருகே ரூ.4.32 கோடியில் தடுப்பணை சீரமைப்பு பணி பூமி பூஜை
4/26/2022 3:52:22 AM
காரைக்கால்,ஏப்.26: காரைக்கால் அருகே தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி உதவியுடன் தடுப்பணை சீரமைப்பு பணிகளுக்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. காரைக்கால் மாவட்டம் அகலங்கன்னு கிராமத்தில் அரசலாற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள தடுப்பணை யில், தேசிய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் நிதி உதவி திட்டத்தின் பொதுப்பணித்துறை மூலம் ரூ.4 கோடியே 32 லட்சம் மதிப்பில் குறுக்கு சுவருடன் கூடிய கான்கிரீட் தரை தளம், கான்கிரீட் தடுப்பு கட்டைகள் அமைத்தல், அகளங்கன் கிராமத்திலிருந்து செட்டிக்கோட்டம் சிற்றேரி வரையிலான இணைப்பு சாலையினை மேம்படுத்துதல், சாலையோரத்தில் கான்கிரீட் தடுப்பு சுவர் அமைத்தல் ஆகிய பணிகளுக்கான பூமி பூஜை நேற்று நடந்தது. இதில் திருநள்ளாறு எம்எல்ஏ சிவா, கலெக்டர் அர்ஜுன் சர்மா ஆகியோர் கலந்துகொண்டு பணிகளை தொடங்கி வைத்தனர். பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் ராஜசேகரன், நீர்ப்பாசனம் மற்றும் பொது சுகாதார கோட்ட செயற்பொறியாளர் வீரசெல்வம், கட்டிடங்கள் மற்றும் சாலைகள் கோட்ட செயற்பொறியாளர் சந்திரசேகரன், நீர்ப்பாசனம் உபகோட்ட உதவி பொறியாளர் மகேஷ், விவசாயிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
மேலும் செய்திகள்
நாகை மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் ஆய்வு
வேதாரண்யத்தில் வேளாண் வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம்
கோயில்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும்
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் புதிதாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமையும் இடம்
அனைவருக்கும் முறையாக கிடைக்க ஒத்துழைக்காதவர்கள்; வீடுகளில் குடிநீர் குழாய் இணைப்பு துண்டிக்கப்படும்: பேரூராட்சி செயல் அலுவலர் எச்சரிக்கை
காரைக்கால் கலெக்டராக மொஹமத் மன்சூர் நியமனம்
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!