சீர்காழியில் மாவட்ட அரசு இசைப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா
4/26/2022 3:52:15 AM
சீர்காழி, ஏப். 26: சீர்காழியில் மாவட்ட அரசு இசைப்பள்ளி பல ஆண்டுகளாக வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. இசைப் பள்ளியில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படித்து வருகின்றனர். இசை பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்த நிலையில் சீர்காழி ரயில்வே ரோடு நகரில் ரூ.1 கோடியில் மாவட்ட இசை பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட அரசு நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான பூமி பூஜை, அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவில் சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம் கலந்து கொண்டு புதிய கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டினார். இதில் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர நாகவேல், உதவி பொறியாளர் ஜாண்டி ரோஸ், திமுக நகர செயலாளர் சுப்பராயன், இசைப் பள்ளி தலைமையாசிரியர் முருகேசன், நாதஸ்வர ஆசிரியர் சிவசுப்பிரமணியன், ஆசிரியர் பாலசுப்ரமணியன் கலந்து கொண்டனர். இசை பள்ளி கட்டிடத்தை கலைநயத்துடன் கட்ட வேண்டுமென தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
நாகை மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் ஆய்வு
வேதாரண்யத்தில் வேளாண் வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம்
கோயில்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும்
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் புதிதாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமையும் இடம்
அனைவருக்கும் முறையாக கிடைக்க ஒத்துழைக்காதவர்கள்; வீடுகளில் குடிநீர் குழாய் இணைப்பு துண்டிக்கப்படும்: பேரூராட்சி செயல் அலுவலர் எச்சரிக்கை
காரைக்கால் கலெக்டராக மொஹமத் மன்சூர் நியமனம்
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!