வாய்க்கால்கள் தூர்வாரும் பணி ஜூன் முதல் வாரத்தில் காவிரியில் தண்ணீர் வருவதற்குள் முடிந்துவிடும்
4/26/2022 3:52:02 AM
தரங்கம்பாடி, ஏப்.26: மயிலாடுதுறை மாவட்டத்தில், காவிரி வடிநில கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் வாய்க்கால்கள் தூர்வாரும் பணி ஜூன் முதல் வாரத்தில் காவிரியில் தண்ணீர் வருவதற்குள் முடிந்துவிடும் என்று கலெக்டர் லலிதா தெரிவித்தார். முதலமைச்சரின் உத்தரவிற்கிணங்க மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று முன்தினம் சிறப்பு தூர்வாரும் பணி துவக்கி வைக்கபட்டது. தரங்கம்பாடி அருகே பாலூர் கிராமத்தில் சிறப்பு தூர்வாரும் பணியை பூம்புகார் எம்எல்ஏ நிவேதாமுருகன் முன்னிலையில் மயிலாடுதுறை கலெக்டர் லலிதா துவக்கி வைத்தார். தொடர்ந்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது: மயிலாடுதுறை மாவட்டம், காவிரி வடிநில கோட்டத்திற்குட்பட்ட பகுதியில் 862.25 கி.மீ தூரத்திற்கு 8 கோடியே 70 லட்சம் செலவில் 49 பணிகள் நடைபெற உள்ளன.
இப்பணிகள் அனைத்தும் முதலமைச்சரின் உத்தரவிற்கிணங்க காவிரியில் தண்ணீர் வருவதற்கு முன்பாக ஜூன் முதல் வாரத்தில் முடிக்கப்படும். இப்பணிக்காக 70 இயந்திரங்கள் 2 ஷிப்டாக பணி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு தூர்வாரப்பட்ட எந்த வாய்காலும் தற்போது எடுத்து கொள்ளப்படவில்லை. 49 பணிகளையும் கண்காணிக்க 49 வேளாண்மை உழவர் குழு அமைக்கபட்டுள்ளது என்று கலெக்டர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் நீர்வளத்துறை செயற்பொறியாளர் சண்முகம், வேளாண் இணை இயக்குநர் சேகர், செம்பனார்கோவில் ஒன்றிய குழு தலைவர் நந்தினி தர், எடுத்துகட்டி ஊராட்சி மன்ற தலைவர் பைலட் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
மேலும் செய்திகள்
நாகை மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் ஆய்வு
வேதாரண்யத்தில் வேளாண் வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம்
கோயில்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும்
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் புதிதாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமையும் இடம்
அனைவருக்கும் முறையாக கிடைக்க ஒத்துழைக்காதவர்கள்; வீடுகளில் குடிநீர் குழாய் இணைப்பு துண்டிக்கப்படும்: பேரூராட்சி செயல் அலுவலர் எச்சரிக்கை
காரைக்கால் கலெக்டராக மொஹமத் மன்சூர் நியமனம்
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!