கறிக்கோழி பண்ணை சங்கத்தினர் மனு
4/26/2022 1:40:04 AM
விருதுநகர், ஏப்.26: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் ஒப்பந்த கறிக்கோழிப்பண்ணை விவசாயிகள் நல சங்க நிர்வாகிகள் அளித்த மனுவில், விவசாய நிலங்களில் உப தொழிலாக கறிக்கோழி வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறோம். கடந்த இரு ஆண்டுகளாக இடுபொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பண்ணை வேலையாட்கள் கூலியும் உயர்ந்துள்ளது. குறைந்தபட்ச வளர்ப்பு தொகை மற்றும் தரமற்ற தீவனம் போன்ற காரணங்களால் கோழிவளர்ப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். உரிய முறையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படவில்லை. தனியார் கறிக்கோழி நிறுவனங்களின் முறையற்ற செயல்பாடுகளை கண்டித்து ஏப்.29 முதல் வேலை நிறுத்தத்தில் கறிக்கோழி பண்ணையாளர்கள் ஈடுபட இருப்பதாகவும், மாவட்ட நிர்வாகம் கோழி வளர்ப்பு நிறுவனங்களின் அராஜக போக்கில் இருந்து விவசாயிகளை காக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகள்
வீடு புகுந்து 8 பவுன் திருட்டு
வரதட்சணை புகாரில் கணவர் கைது
சுதந்திர தின மாரத்தான் போட்டிகள்
1,459 மையங்களில் தடுப்பூசி முகாம்
வங்கி ஊழியர்களின் மாரத்தான்
6 பவுன் நகை வழிப்பறி
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!