பள்ளியில் மலேரியா விழிப்புணர்வு
4/26/2022 1:38:12 AM
திருப்புத்தூர், ஏப்.26: திருப்புத்தூர் ஆர்.சி.பாத்திமா பள்ளியில் நேற்று உலக மலேரியா தினம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. திருப்புத்தூர் ஆர்.சி.பாத்திமா அரசு உதவிபெறும் பள்ளியில் நேற்று உலக மலேரியா தினம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலர் செந்தில்குமார் தலைமை வகித்தார். பள்ளி தலைமையாசிரியர் குமார் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில், மலேரியா பரவும் விதம், மலேரியா பரிசோதனை, மலேரியா தடுப்பு மருந்து மற்றும் மலேரியா வராமல் தடுப்பதற்கான வழிமுறைகள் பற்றி மாவட்ட பூச்சியில் வல்லுநர் ரமேஷ் விளக்கி கூறினார். மேலும் மாணவ, மாணவிகள் மலேரியா வராமல் தடுப்பது குறித்து உறுதி மொழி எடுத்து கொண்டனர். இதில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர், சுகாதார ஆய்வாளர் சகாய ஜெரால்ட்ராஜ் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
வீடு புகுந்து 8 பவுன் திருட்டு
வரதட்சணை புகாரில் கணவர் கைது
சுதந்திர தின மாரத்தான் போட்டிகள்
1,459 மையங்களில் தடுப்பூசி முகாம்
வங்கி ஊழியர்களின் மாரத்தான்
6 பவுன் நகை வழிப்பறி
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!
விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!
இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!
சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!
ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து சிதறி நெருப்பு ஆறு பாய்கிறது!!