சர்வதேச புவி தினத்தை முன்னிட்டு திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு
4/23/2022 2:01:08 AM
ஊட்டி, ஏப்.23: சர்வதேச புவி தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களிடையே திடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தேசிய பசுமைப்படை சர்வதேச புவி தினம் காந்தல் முக்கோணம் திடக்கழிவு மேலாண்மை பகுதியில் அனுசரிக்கப்பட்டது. ஓம் பிரகாஷ் துவக்கப்பள்ளி மாணவர்கள் நேரடியாக நகராட்சி கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வினை பெற்றனர். ஊட்டி நகராட்சி நகர நல மருத்துவர் ஸ்ரீதர் தலைமை வகித்து பேசுகையில்,``ஆரோக்கியமான வாழ்விற்கு சுகாதாரம் அவசியம், அதை வீட்டில் இருந்தே தொடங்க வேண்டும். மக்கும் மக்காத பொருட்களை பிரித்துக் கொடுப்பது மற்றும் நாம் வாழ அனைத்தையும் தரும் இயற்கையை பாதுகாப்பது நமது கடமை. மாணவர்கள் இந்த கருத்தினை அனைவரிடமும் கொண்டு செல்வது அவசியம்’’ என்றார். நகராட்சி சுகாதார ஆய்வாளர் வைரம் பேசுகையில்,``நீராதாரங்களில் குப்பைகளை வீசி எறிவதும் வனப்பகுதியில் பிளாஸ்டிக் குப்பைகளை கொட்டி செல்வது தவிர்க்க வேண்டும்’’ என்றார். இந்நிகழ்ச்சியில் தலைமையாசிரியர் வசந்தி, ஆசிரியர்கள் மகாலட்சுமி, கற்பகவள்ளி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை சிறுவாணி அணை நீர்மட்டம் 43 அடியாக உயர்வு
இந்திய விமானப்படையின் விழிப்புணர்வு வாகனம்
காவல் துறையை கண்டித்து இந்து முன்னணி ஆக.14ல் ஆர்ப்பாட்டம்
வெள்ளலூர் கிடங்கிற்கு வரும் குப்பைகளை குறைக்கும் நடவடிக்கை தீவிரம்
உடல் கருகி மூதாட்டி பலி
கோவை மண்டலத்தில் பத்திர பதிவில் 4 மாதத்தில் ரூ.963 கோடி வருவாய்
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!