சிவகாசி மெப்கோ கல்லூரியில் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா
4/21/2022 8:09:32 AM
சிவகாசி, ஏப்.21: சிவகாசி மெப்கோ கல்லூரியில் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற்றது. கல்லூரி நிர்வாகக் குழுத் தலைவர் ராமலிங்கம், தாளாளர் டென்சிங் ஆகியோர் தலைமை வகித்தனர். முதல்வர் முனைவர் அறிவழகன் முன்னிலை வகித்து பேசுகையில், கடந்த காலங்களில் இந்த ஊக்கத்தொகை அல்லது நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக அரசு ஒதுக்கீட்டில் சேரும் அனைத்து மாணவர்களுக்கும் உதவித்தொகை வழங்கப்படுகிறது. மாணவர்கள் முயற்சி செய்து நன்றாக படித்தால்தான் அனைவரும் இந்த உதவி தொகையை பெற முடியும். இந்த உதவித் தொகை அல்லது மாணவர்களை ஊக்குவித்து பாராட்டும் வகையிலும் அவர்களது அறிவாற்றலை திறமையையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் மட்டுமே வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு 343 மாணவர்களுக்கு ரூ.66.25 லட்சம் மதிப்பில் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களை கல்வியில் ஊக்குவிப்பது மட்டுமின்றி விளையாட்டு கலை மற்றும் சிறந்த கண்டுபிடிப்புகளுக்கும் பரிசு வழங்கப்பட்டு வருகிறது என்றார். முடிவில் கல்லூரி முதல்வரின் தனி செயலர் மாதவன் நன்றி கூறினார்.
மேலும் செய்திகள்
ராஜபாளையத்தில் காற்று மழையால் மரங்கள் சாய்ந்தன
ஆதார் சேவைகளுக்கு சிறப்பு முகாம்
பயிற்சியாளரே இல்லாமல் யோகாவில் தங்கம்,வெண்கலம் வென்ற சகோதரிகளுக்கு உற்சாக வரவேற்பு
ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி
மஞ்சப் பை வழங்கல்
வேளாண் இயந்திரங்கள் பழுது நீக்க மையம் அமைக்க மானியம்
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!