மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை நிராகரிக்க வேண்டும்
4/21/2022 7:44:08 AM
ஈரோடு, ஏப். 21: ஒன்றிய அரசின் மோட்டார் வாகனச் சட்ட திருத்தத்தை நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்தி சிஐடியூ ஆட்டோ தொழிலாளர்கள் சங்கத்தினர்நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சூரம்பட்டி நால்ரோட்டில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்க பொதுச்செயலாளர் ஷேக்தாவூத் (எ) கண்மணி தலைமை வகித்தார்.
சிஐடியூ மாவட்டத் தலைவர் சுப்ரமணியன், சாலைப்போக்குவரத்து தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் கனகராஜ், துணைச்செயலாளர் பொன்.பாரதி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில், 8 மடங்கு உயர்த்தி உள்ள எப்.சி. கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். தாமதத்துக்கு நாளொன்றுக்கு ரூ. 50 அபராதம் விதிப்பதை கைவிட வேண்டும். தினமும் உயர்த்தப்பட்டு வரும் பெட் ரோல், டீசல் விலை உயர்வை தடுக்க வேண்டும். 10 வருட பழைய ஆட்டோவுக்கு 10 மடங்கு எப்.சி. கட்டண உயர்வைக் கைவிட வேண்டும்.
எதிர்பாராத சிறிய விபத்துகளுக்கும் ஓட்டுனர் உரிமம் பறிப்பு, வாகனம் பறிமுதல், சிறை தண்டனை எனும் நியாயமற்ற சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக மோட்டார் வாகனச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்களை நிராகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.இதில், திரளான ஆட்டோ, சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
சட்டவிரோதமாக வெடிபொருட்கள் பதுக்கினால் தகவல் தெரிவிக்கலாம் ஈரோடு போலீசார் வலியுறுத்தல்
கொரோனா காரணமாக ரத்தான 1ம் தேதி முதல் ஓய்வூதியர் நேர்காணல் நடத்த முடிவு
கஞ்சா விற்ற 4 பேர் கைது
தீ குளித்து மூதாட்டி பலி
கோபி மொடச்சூரில்தாய் சேய் நலவிடுதி திறப்பு
குருப்பநாயக்கன்பாளையம் ஊராட்சியில் வாழ்ந்து காட்டுவோம் திட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!