ஈரோடு கலை அறிவியல் கல்லூரியில் தீ தடுப்பு மற்றும் முதலுதவி பயிற்சி
4/20/2022 7:29:38 AM
ஈரோடு, ஏப்.20: ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சுயநிதிப்பிரிவு ஆங்கிலத்துறை சார்பாக தீ தொண்டு வாரம் கொண்டாடப்பட்டது. இதில் ஆசிரியரல்லா பணியாளர்கள், ஆய்வக உதவியாளர்கள் மற்றும் மாணவ- மாணவிகளுக்கு தீ தடுப்பு மற்றும் முதலுதவிப் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்நிகழ்விற்கு கல்லூரி இயக்குநர் இரா.வெங்கடாசலம் தலைமை தாங்கினார். முதல்வர் இரா.சங்கரசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.
ஈரோடு மாவட்ட தீயணைப்பு அலுவலர் புளுகாண்டி உத்தரவின் பேரில் ஈரோடு தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துக்குமாரசாமி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் மாணவ- மாணவிகளுக்கு பயிற்சியளித்தனர். முதலுதவி தொடர்பான கேள்விகளுக்கும் தீயணைப்பு துறையினர் பதிலளித்தனர். இந்நிகழ்விற்கான ஏற்பாட்டினை ஆங்கிலத்துறைத் தலைவர் வசந்தகுமாரி மற்றும் துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர்.
மேலும் செய்திகள்
சட்டவிரோதமாக வெடிபொருட்கள் பதுக்கினால் தகவல் தெரிவிக்கலாம் ஈரோடு போலீசார் வலியுறுத்தல்
கொரோனா காரணமாக ரத்தான 1ம் தேதி முதல் ஓய்வூதியர் நேர்காணல் நடத்த முடிவு
கஞ்சா விற்ற 4 பேர் கைது
தீ குளித்து மூதாட்டி பலி
கோபி மொடச்சூரில்தாய் சேய் நலவிடுதி திறப்பு
குருப்பநாயக்கன்பாளையம் ஊராட்சியில் வாழ்ந்து காட்டுவோம் திட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!