மயிலாடுதுறை அருகே அனுமதியின்றி செயல்பட்ட பாருக்கு சீல் வைப்பு
4/13/2022 12:19:34 AM
மயிலாடுதுறை, ஏப்.13: மயிலாடுறை மாவட்டத்தில் 45 டாஸ்மாக் கடைகளில் 17 கடைகளில் பார் ஏலத்திற்கு தமிழக அரசு அறிவித்தும் அவற்றை ஏலம் எடுக்க யாரும் முன்வரவில்லை. மாவட்டத்தில் 3 கடைகள் மட்டுமே பாருக்கான லைசென்ஸ் எடுத்துள்ளது. இந்நிலையில் சட்டத்திற்கு புறம்பாக பல்வேறு டாஸ்மாக் கடைகளில் பார் நடந்து வருகிறது. இதனால் அரசுக்கு வரக்கூடிய வருமான இழப்பு ஏற்படுகிறது. இதுகுறித்து மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது, மயிலாடுதுறை டாஸ்மாக் மாவட்ட மேலாளர் வாசுதேவன் மற்றும் போலீசார் பல்வேறு இடங்களுக்கு சென்று அனுமதியில்லாமல் நடந்த பார்களை பூட்டி சீல் வைத்து வருகின்றனர். மயிலாடுதுறை அருகே செம்பனார்கோவில், ஆக்கூர் மற்றும் திருக்கடையூர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு திடீர் சோதனைக்கு சென்றபோது அனுமதியில்லாமல் பார் நடந்து வந்தது அதிகாரிகளைக் கண்டதும் பார் நடத்தியவர்கள் தப்பியோடி தலைமறைவாகிவிட்டனர். இதையடுத்து அதிகாரிகள் பாரை பூட்டி சீல் வைத்தனர்.
மேலும் செய்திகள்
நாகப்பட்டினம், நாகூர் பகுதியில் புதை வட மூலம் மின் பாதை அமைக்கும் பணி விரிவுபடுத்தப்படும் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் எஸ்.ஆர்.ராஜா பேட்டி
நாகப்பட்டினம் பழைய ஆயுதப்படை மைதானத்தில் திடீர் தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் வாகனங்கள் சாம்பல்
பழையாறு துறைமுகத்தில் 5,000 மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவில்லை
காரைக்கால் தனியார் துறைமுகத்தில் இருந்து நிலக்கரி ஏற்றி வந்த ரயில் இன்ஜின் பழுது
சீர்காழி அருகே மகனை தந்தை கடத்தியதாக தாய் புகார்
செம்பனார்கோயில் அருகே ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் கோயிலில் ருத்ராபிஷேகம்
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!