அரசு கலைக் கல்லூரியில் சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம்
4/8/2022 1:42:48 AM
திருப்புத்தூர், ஏப்.8: திருப்புத்தூர் அருகே பூலாங்குறிச்சி வ.செ.சிவ. அரசு கலைக்கல்லூரியில் வரலாற்றுத் துறையின் சார்பில் சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முத்துசாமி தலைமை வகித்தார். கவுரவ விரிவுரையாளர் ரமேஷ் வரவேற்றார். அடிப்படை உரிமைகள், உரிமையியல் சட்டங்கள், போக்குவரத்து சட்டங்கள், போக்குவரத்து விதிமுறைகள், பெண்களுக்கான உரிமைகள் மற்றும் சட்ட பாதுகாப்புகள் ஆகியவை குறித்து விழிப்புணர்வு கருத்துக்களை மாணவர்களிடத்தில் எடுத்துரைத்து வழக்குரைஞர் முருகேசன் பேசினார். கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை வரலாற்றுத்துறை கவுரவ விரிவுரையாளர்கள் சஞ்சீவ்குமார் மற்றும் முனைவர் அம்பிகா ஆகியோர் செய்திருந்தனர். கவுரவ விரிவுரையாளர் பொன்னருவி நன்றி கூறினார்.
மேலும் செய்திகள்
வாசித்தல் மாரத்தானில் மதுரை மாவட்டம் சாம்பியன் கல்வி அலுவலர்களுக்கு கலெக்டர் விருது
ஒன்றிய அரசை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
மதுரை ரயில் நிலையத்தில் ரூ.1 லட்சம் பொருட்கள் திருட்டு
மதுரையில் கஞ்சா விற்ற 8 பேர் கைது: 43 கிலோ பறிமுதல்
செட்டிகுளம் அரசு உதவி பெறும் பள்ளி விவகாரம்: அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை
பால் வேன் கவிழ்ந்து விபத்து
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!
விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!
இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!
சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!
ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து சிதறி நெருப்பு ஆறு பாய்கிறது!!