விவசாயிக்கு நஷ்ட ஈடு வழங்ககோரி சாலைமறியல் 2 கி.மீட்டர் தூரம் அணிவகுத்து நின்ற வாகனங்கள் லாரி மோதி படுகாயமடைந்த
4/2/2022 12:10:04 AM
வந்தவாசி, ஏப்.2:வந்தவாசி அருகே லாரி மோதி படுகாயமடைந்த விவசாயிக்கு நஷ்ட ஈடு வழங்க கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் 2 கி.மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
வந்தவாசி அடுத்த மாலையிட்டான் குப்பம் கிராமத்தில் கல்குவாரி உள்ளது. இக்கல் குவாரிக்கு சொந்தமான லாரி நேற்று கற்களை ஏற்றி வரும்போது கல்குவாரியின் மெயின் கேட் வழியாக லாரி திரும்பியபோது, அவ்வழியாக வந்த பைக் மீது லாரி மோதியது. இதில், விவசாய நிலத்துக்கு சென்ற மாலையிட்டான் குப்பத்தை சேர்ந்த சக்தி(32) என்பவர் படுகாயமடைந்தார். கால் பகுதியில் காயமடைந்த அவரை உடனே அப்பகுதிமக்கள் மீட்டு, சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனை கண்டித்து அவரது உறவினர்கள் வந்தவாசி-காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் நேற்றிரவு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில், பாதிக்கப்பட்டவருக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும். இவ்வழியாக லாரி செல்வதை தடுக்க வேண்டும் என கோஷம் எழுப்பினர்.
இதுகுறித்து தகவலறிந்த டிஎஸ்பி விஸ்வேஸ்வரய்யா, வந்தவாசி வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால், 1 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சாலை மறியலால் 2 கி.மீட்டர் தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
மேலும் செய்திகள்
₹50 லட்சத்தில் வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு தீர்மானம் நிறைவேற்றம் ஆரணி நகரமன்ற கூட்டத்தில்
ஊராட்சி செயலாளருக்கு வாந்தி, மயக்கம் உணவு மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பி வைப்பு ஆரணியில் தொடரும் அதிர்ச்சி சம்பவங்கள் அசைவ ஓட்டலில் காடை சாப்பிட்ட
அண்ணாமலையார் கோயிலில் பந்தக்கால் முகூர்த்தம் விமரிசையாக நடந்தது கார்த்திைக தீபத்திருவிழா தொடக்கமாக
அசைவ ஓட்டலில் காடை சாப்பிட்ட ஊராட்சி செயலாளருக்கு வாந்தி, மயக்கம் உணவு மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பி வைப்பு ஆரணியில் தொடரும் அதிர்ச்சி சம்பவங்கள்
(தி.மலை) நாய்கள் கடித்து மான் பலி திருவண்ணாமலை கிரிவலப்பாதையில்
(தி.மலை-இ2-4) சாராயம் கடத்தி சென்ற பைக் மோதி தொழிலாளி படுகாயம் போலீஸ் விசாரணை கண்ணமங்கலம் அருகே
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!