மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம் பேரணாம்பட்டு ஆதிதிராவிட நல மேல்நிலைப்பள்ளியில்
3/31/2022 2:13:16 AM
பேரணாம்பட்டு, மார்ச் 31: பேரணாம்பட்டு ஆதிதிராவிட நல மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடந்தது.
வேலூர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, பேரணாம்பட்டு வட்டார வள மையம் சார்பில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் ஆதிதிராவிட நல மேல்நிலைப் பள்ளியில் நடைப்பெற்றது. இம்முகாமில் 1 வயது முதல் 18 வயதுடைய மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் தேசிய அடையாள அட்டை, மதிப்பீட்டின் அடிப்படையில் உதவி உபகரணங்கள், இலவச அறுவை சிகிச்சை, கல்வி உதவித்தொகை, இலவச பேருந்து தேசிய அடையாள அட்டை போன்றவற்றிற்கு பரிந்துரைக்கப்பட்டது.
முகாமை பேரணாம்பட்டு நகர மன்றத்தலைவர் வெ.பிரேமா வெற்றிவேல் மருத்துவர்கள் பரிந்துரைத்த சான்றுகளை மாணவர்களுக்கு வழங்கி முகாமை தொடங்கி வைத்தார். இதில் பேரணாம்பட்டு வட்டாரக் கல்வி அலுவலர்கள் இளவரசன், விஜயலட்சுமி, பேரணாம்பட்டு வட்டார மேற்பார்வையாளர் கண்ணதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவர்கள் செந்தில்குமார், தனஞ்செயன், பாபு, புகழரசி ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினர் 198 மாற்றுத்திறனாளி மாணவர்களை மருத்துவ ஆய்வு செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை வட்டார வள மேற்பார்வையாளர் கண்ணதாசன் தலைமையிலான குழுவினர் நாகராஜ், மோனிஷ், சுரேஷ், மஞ்சுளா, மேரி ஆகியோர் செய்திருந்தனர்.
மேலும் செய்திகள்
குடியாத்தம் அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம்
ேவலூர் மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு ஒருநாள் புத்தாக்க பயிற்சி எம்எல்ஏ, மேயர் பங்கேற்பு
திருவலம் பேரூராட்சியில் பணி நியமனம், வரிமேல் முறையீட்டுக் குழு உறுப்பினர் திமுகவினர் போட்டியின்றி தேர்வு
வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் இறந்தவர்களின் வாரிசுகள் நிவாரணத்திற்கு விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
கூட்டுறவு வங்கி பேரவைக்கூட்டம் குடியாத்தத்தில்
வேலூர் மாவட்டத்திற்கு சட்டமன்ற குழு விரைவில் வருகை கலெக்டர் தகவல் பொதுப்பிரச்னையை 20ம் தேதி தெரிவிக்கலாம்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;
மெக்சிகோவில் நூற்றுக்கணக்கான ஒரே பாலின ஜோடிகளுக்கு ஒன்றாக திருமணம்..!!
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!