திமுக வேட்பாளர் காமராஜை ஆதரித்து டி.ஆர்.பாலு எம்பி பிரசாரம்
2/15/2022 2:06:52 AM
தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி 49வது வார்டு திமுக வேட்பாளரான தாம்பரம் நகர முன்னாள் துணை தலைவர் காமராஜை ஆதரித்து, திமுக நாடாளுமன்ற குழு தலைவரும், திமுக பொருளாளருமான டி.ஆர்.பாலு எம்பி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், ‘‘திமுக ஆட்சியில் மக்களுக்கு தேவையான பல்வேறு திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். இது, அனைவரிடமும் வரவேற்பை பெற்றுள்ளது. இதன்காரணமாக, கடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு பெரும்பாலான இடங்களில் மக்கள் வாய்ப்பு அளித்தனர்.
அதேபோல் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் திமுகவின் நல்லாட்சி அமைந்திட மக்கள் ஆர்வமாக உள்ளனர். எனவே, காமராஜ் வெற்றிக்கு நிர்வாகிகள் களப்பணியாற்ற வேண்டும். அவர் வெற்றி பெற்றதும் மக்களுக்கு தேவையான அனைத்து பணிகளையும் செய்து கொடுப்பார். மக்கள் கோரிக்கைகளை நிச்சயமாக நிறைவேற்றுவார்,’’ என்றார். வாக்கு சேகரிப்பின் போது தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ பீமாராவ், திமுகவினர் பா.பாரதி, கோ.ராஜேந்திரன், பட்டுராஜா, கந்தசாமி, சீனா, ரமேஷ், பாஸ்கர், விக்கி (எ) யுவராஜ், பன்னீர்செல்வம், ஏழுமலை, சதீஷ், தனஞ்செயன், பாலா, கோபி, குருமணி, கணபதி, சுரேஷ், மைக்கேல், நியூட்டன், ஹரிகிருஷ்ணன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
மேலும் செய்திகள்
புழல் பகுதியில் அடுத்தடுத்து 2 வீடுகளில் கொள்ளை 3 பேர் கைது
பாங்க் ஆப் மகாராஷ்டிரா சார்பில் ரூ.1.4 லட்சம் கோடி கடன் டெபாசிட் 12.35% உயர்வு
ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்து ரூ.2 கோடி அரசு நிலம் மீட்பு அதிகாரிகள் நடவடிக்கை
வண்ணாரப்பேட்டை, நுங்கம்பாக்கம் பகுதியில் ரூ.45 கோடி மதிப்பீட்டில் 2 நடைபாதை பிளாசா மாநகராட்சி அதிகாரிகள் தகவல்
திருமங்கலத்தில் மால் வளாகத்தில் உள்ள பிரபல ஓட்டல் உணவில் புழு, கரப்பான் பூச்சி உணவு பாதுகாப்பு துறை ஆய்வு
இளம்பெண் தற்கொலை வழக்கில் கள்ளக்காதலன் அதிரடி கைது; கணவருக்கு எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!
கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ..
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!