கிருஷ்ணா கால்வாயில் நீந்தி வந்த புள்ளிமானை மீட்ட மக்கள்
2/3/2022 5:30:54 AM
ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே அனந்தேரி பகுதியில் உள்ள கிருஷ்ணா கால்வாயில் நேற்று ஏதோ ஒரு விலங்கு தண்ணீரில் நீந்தி கொண்டு செல்வதை அப்பகுதி மக்கள் பார்த்தனர். உடனே அவர்களில் சிலர் கிருஷ்ணா கால்வாயில் இறங்கி பார்த்தபோது ஆண் புள்ளி மான் என தெரியவந்தது. உடனே அப்பகுதி மக்கள் அந்த மானை மீட்டு சீத்தஞ்சேரியில் உள்ள செங்குன்றம் வனச்சரகத்தினருக்கு தகவல் கொடுத்தனர். இதையறிந்த வன அலுவலர் கணபதி மற்றும் வனக்காவலர்கள் சம்பவயிடமான அனந்தேரி கிராமத்திற்கு வந்து புள்ளிமானை மீட்டுச்சென்றனர். மேலும், கிருஷ்ணா கால்வாயில் மான் அடித்து கொண்டு வந்ததால் லேசான சிராய்ப்பு காயம் ஏற்பட்டது. அதற்கு வனத்துறையினர் முதலுதவி அளித்தனர். இதனால், அக்கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் செய்திகள்
மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு குறித்து கள ஆய்வு
செல்போன் பறிப்பை தடுத்த வாலிபருக்கு அரிவாள் வெட்டு
ஆவடி காவல் ஆணையரகத்தில் சாலை பாதுகாப்புக்கு பிரத்யேக வலைதளம்: போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் துவக்கி வைத்தார்
மக்கள் தொடர்பு திட்ட முகாம்: எம்எல்ஏ நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
பொன்னேரியில் 2,278 பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி
சட்டமுறை எடையளவு பின்பற்றாத 45 நிறுவனங்கள் மீது நடவடிக்கை: உதவி ஆணையர் எச்சரிக்கை
மத்தியதரைக் கடலில் குடியேறியவர்கள் பத்திரமாக மீட்பு..!!
ஆர்டிமிஸ் 1 திட்டத்துக்கான ஒத்திகையை தொடங்கியது நாசா
கடலுக்கு அடியில் அதிசய நகரம்: அழகிய ரோமன் நகரின் அற்புத காட்சி..!!
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...