டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்ததால் சாலை தடுப்பில் மோதி ஆம்புலன்ஸ் கவிழ்ந்தது
1/29/2022 9:16:44 AM
திருவொற்றியூர்: ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் ஒன்று, சிகிச்சை முடிந்த நோயாளியை எண்ணூர் சுனாமி குடியிருப்பில் இறக்கி விட்டுவிட்டு, மீண்டும் மருத்துவமனைக்கு புறப்பட்டது. ஆம்புலன்சை ஐயப்பன் என்ற டிரைவர் ஓட்டினார். உதவியாளர் குமரவேல் (26) பக்கத்தில் அமர்ந்து இருந்தார்.
எண்ணூர் விரைவு சாலையில் திருவொற்றியூர் தாங்கல் தெரு அருகே வேகமாக சென்றபோது, ஆம்புலன்சின் முன்பக்க டயர் திடீரென வெடித்ததால், கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் சாலை தடுப்பில் மோதி கவிழ்ந்தது. ஐயப்பன் மற்றும் குமரவேல் ஆகிய இருவரும் ஆம்புலன்ஸ் உள்ளே சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் ஆம்புலன்சை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர்.
மேலும் செய்திகள்
மும்பையில் வாங்கி சென்னையில் விற்பனை; வாட்ஸ்அப் மூலம் போதை மாத்திரை ஊசி சப்ளை செய்த இருவர் கைது: 1300 மாத்திரை, 15 ஊசி பறிமுதல்
போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்: காவல்துறை அறிவிப்பு
சாலை தடுப்பில் பைக் மோதி மகன் பலி; தந்தை படுகாயம்
வாலிபரை கத்தியால் வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை பைக்கில் விரட்டி பிடித்த எஸ்ஐ: சினிமா பாணியில் பரபரப்பு சம்பவம்
கொடுங்கையூர் குப்பை கிடங்கில் தீ விபத்து: கண் எரிச்சல், சுவாசக்கோளாறால் மக்கள் அவதி
வயதை மறைத்து திருமணம் செய்யப்பட்ட சிறுமிக்கு குழந்தை பிறந்தது: போக்சோவில் கணவன் கைது
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்