ஏஐடியுசி ஆர்ப்பாட்டம்
1/29/2022 6:42:40 AM
திருப்பூர், ஜன. 29: ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படி உயர்வை வழங்கக்கோரி ஏஐடியுசி அரசு போக்குவரத்து ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் திருப்பூர் போக்குவரத்து பணிமனை முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஏஐடியுசி மண்டல துணை தலைவர் பரமசிவம் தலைமை வகித்தார். மண்டல செயலாளர் சண்முகம், மாவட்ட பொதுச்செயலாளர் சேகர் உள்ளிட்ட பலர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படியை நிலுவை தொகையுடன் சேர்த்து வழங்க வேண்டும். 14 வது ஊதிய ஒப்பந்தத்தை சங்கங்களை அழைத்து பேசி முடித்து ஊதியம் வழங்க வேண்டும். 2003க்கு பின்னர் பணியில் சேர்ந்த தொழிலாளர்களை பென்சன் திட்டத்தில் இணைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
மேலும் செய்திகள்
சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
அவிநாசி அரசு கல்லூரியில் நூலகம் திறப்பு பாரதி கொள்ளு, எள்ளு பேரன்கள் பங்கேற்பு
மாநில அளவிலான சதுரங்க போட்டியில் திருப்பூர் காது கேளாதோர் பள்ளி மாணவர்கள் சாதனை
திருப்பூர் மாநகராட்சியில் ஏப்.30ல் கொரோனா தடுப்பூசி முகாம்
எம்ப்ராய்டரி பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
கருப்பராயன் கோவில் பொங்கல் திருவிழா கிடா வெட்டி பக்தர்கள் நேர்த்திக்கடன்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!