பணம் திருடு போனதில் தகராறு லாரி ஓனரை தாக்கிய வாலிபர் கைது
1/29/2022 6:35:32 AM
கோவை, ஜன. 29: தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (44). இவர் சொந்தமாக லாரி வைத்து தொழில் செய்து வருகிறார். கோவை சூலூரில் விருமாண்டி என்பவருக்கு சொந்தமான இடத்தில் ஷெட் அமைத்து தங்கியிருந்து லாரி ஓட்டி வருகிறார். சில நாட்களுக்கு முன்பு ராஜ்குமார் லாரியில் வைத்திருந்த ரூ.11 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ராஜ்குமார், இட உரிமையாளர் விருமாண்டியிடம் கேட்டுள்ளார். அப்போது விருமாண்டி பணம் திருடு போனது தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என தெரிவித்துள்ளார்.
சம்பவத்தன்று மீண்டும் பணம் திருடு போனது தொடர்பாக ராஜ்குமாருக்கும், விருமாண்டிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது விருமாண்டிக்கு ஆதரவாக திருப்பூர் அவிநாசி பாளையத்தை சேர்ந்த பார்த்தசாரதி (21) என்ற வாலிபர் ராஜ்குமாரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த அவர் கோவை அரசு மருத்துவனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ராஜ்குமார் சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் கைது செய்தனர்.
மேலும் செய்திகள்
10ம் வகுப்பு மாணவி தற்கொலை குறித்து போலீசார் விசாரணை
துணை ஜனாதிபதி வழியனுப்பு: குமரகுரு கல்வி நிறுவனங்களின் யுகம் 2வது நாள் நிகழ்வுகள்
தமிழக முதல்வரிடம் மாநகராட்சி கவுன்சிலர் மனு
‘கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம்’37 கிராம ஊராட்சிகளில் காணொலி மூலம் முதல்வர் துவக்கி வைக்கிறார்
ஓராண்டு ஆட்சி நூறாண்டு பேசும்: முன்னாள் எம்எல்ஏ கோவை தங்கம் அறிக்கை
கல்குவாரியில் ஆண்சடலம் மீட்பு அடையாளம் காண முடியாமல் மங்கலம் போலீசார் திணறல்
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்