செல்போனால் தகராறு: வாலிபரை கட்டையால் தாக்கிய 3 பேர் கைது
1/28/2022 3:15:33 AM
ஓசூர்:அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் கிருஷ்ணா(30). இவர் ஓசூர் அருகேயுள்ள கப்பகல் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். இவர் தனது உறவினர்களான அசாம் மாநிலத்தை சேர்ந்த ராமு (20), விஜய் (25), பிரான்(26) ஆகியோருடன் தங்கியுள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன், கிருஷ்ணா ஊருக்கு போன் பேச வேண்டுமென ராமுவிடம் செல்போன் கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், அங்கிருந்த ராமு, விஜய், பிரான் ஆகிய 3 பேரும், கிருஷ்ணாவை கட்டையால் சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த கிருஷ்ணா, ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரிக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் ராமு, விஜய், பிரான் ஆகிய 3 பேர் மீதும் மத்திகிரி போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
மேலும் செய்திகள்
கோயில் கும்பாபிஷேக விழாவில் 3 மூதாட்டிகளிடம் 15 பவுன் நகை பறிப்பு
ஆத்தூர் உயர்மட்ட பாலம் பணிக்காக ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு
கெங்கவல்லி அருகே மின்கசிவால் குடிசை வீட்டில் தீ விபத்து
கரியகோயில் அணையில் இருந்து பழைய பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு
அரசுப்பள்ளியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மை பணிகளை கலெக்டர் திடீர் ஆய்வு
நாமகிரிப்பேட்டை அருகே 7ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!