தோகைமலை அருகே ஆர்டி மலையில் விராச்சிலேஸ்வரர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு
1/28/2022 12:55:39 AM
தோகைமலை, ஜன.28: தோகைமலை அருகே ஆர்டி மலையில் உள்ள விராச்சிலேஸ்வரர் மற்றும் பெரியநாயகியம்மன் கோயிலில் மக்கள் மத்தியில் பரவி வரும் கொரோனா 3வது அலையில் இருந்து பொதுமக்களை காக்க தேய்பிறை அஸ்டமி சிறப்பு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. முன்னதாக விராச்சிலேஸ்வரர் மற்றும் பெரியநாயகி சமேத சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம், அபிசேகம் செய்தனர். பின்னர் கோயிலில் அமைந்துள்ள காலபைரவருக்கு பால், பண்ணீர், பஞ்சாமிற்தம் உள்பட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிசேகம் நடந்தது. தொடர்ந்து கால பைரவருக்கு சிறப்பு அலங்காரம் செய்து வடை மாலை அனிவித்து தேங்காய், பூசனிக்காய் விளக்கு ஏற்றி கொரோனா 3வது அலையில் இருந்து உலக மக்களை பாதுகாக்க வேண்டி தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜையில் காலபைரவரை வழிபட்டனர். பின்னர் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இதேபோல் சின்னரெட்டியபட்டியில் உள்ள ஆவுடைலிங்கேஸ்வரர், தோகைமலை மீனாட்சி சுந்தரேஸ்வரர், சிவாயம் சிவபுரீஸ்வரர், டி.எடையபட்டி ரெத்தினகிரீஸ்வரர் ஆகிய கோயில்களில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை நடந்தது.
மேலும் செய்திகள்
சீருடை பணியாளர் தேர்வாணைய சார்பு ஆய்வாளர் பணிக்கு எழுத்து தேர்வு
தினமும் மாலையில் தோகைமலையில் ஆசிரியர்களுக்கு ஆங்கில பேச்சுத்திறன் : வளர்த்தல் குறித்த பயிற்சி
கரூரில் முதன்முறையாக துவக்கம்; கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்: அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார்
நகராட்சியை பசுமையாக மாற்ற புகளூர் பெண்கள் பள்ளியில் மாணவிகள் விழிப்புணர்வு உறுதிமொழி
கரூர் தபால் தந்தி அலுவலகம் முன் அக்னிபாத் திட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
2 வார விடுமுறைக்கு பிறகு கரூர் மாவட்டத்தில் 1041 பள்ளிகள் திறப்பு
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்