பலத்த போலீஸ் பாதுகாப்பு
1/26/2022 3:17:48 AM
குடியரசு தினவிழாவை முன்னிட்டு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சேலம் மாநகரில் போலீஸ் கமிஷனர் நஜ்முல் கோடா உத்தரவின் பேரில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விழா நடக்கும் காந்தி ஸ்டேடியம் முழுவதும், நேற்று போலீஸ் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டு, தீவிர சோதனை நடந்தது. மாநகர் முழுவதும் போலீசார் வாகன சோதனைகளில் ஈடுபட்டனர். இதேபோல், சேலம் ஜங்சன் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படையினரும், ரயில்வே போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மோப்பநாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவி கொண்டு, சேலம் வழியாக செல்லும் ரயில்களில் ஏறி, பயணிகளின் உடமைகளை சோதனையிட்டனர். ரயில்வே தண்டவாளங்கள், பார்சல் பிரிவுகளிலும் சோதனை நடைபெற்றது.
மேலும் செய்திகள்
கச்சுப்பள்ளியில் திட்ட செயலாக்க ஆலோசனை கூட்டம்
மாவட்டத்தில் கொரோனாவால் பெற்றோரை இழந்த 1,049 குழந்தைகளுக்கு நிவாரணம்
ஆதரவற்றோர் இல்ல குழந்தைகளுக்கு அன்னதானம்
தம்மம்பட்டி பஸ் நிலையத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் ஆய்வு
தமிழக முதல்வர் பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்தில் கொட்டும் மழையில் அமைச்சர் நேரு ஆய்வு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை
திருச்செங்கோட்டில் செவிலியர் தின ஊர்வலம்
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்