திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை அறை பின்புறம் பயங்கர தீ விபத்து
1/26/2022 3:13:59 AM
திருவில்லிப்புத்தூர்: திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை அறை அருகே உள்ள குப்பையில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இது தொடர்பாக கிடைத்த தகவலின் பேரில் விரைந்து சென்று திருவில்லிபுத்தூர் தீயணைப்பு துறையினர் போராடி அணைத்தனர்.
திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனை பின்புறம் உழவர் சந்தை அருகே பிரேத பரிசோதனை அறை உள்ளது. இந்தப் பிரேத பரிசோதனை அறையின் பின்புறம் ஏராளமான குப்பைகள் குவிந்து இருந்தன. இந்த குப்பைகளில் நேற்று முன்தினம் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தீ மளமளவென காற்றின் வேகத்திற்கு பெரிய அளவில் எரிந்ததால் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் திருவில்லிபுத்தூர் தீயணைப்பு துறை அதிகாரி குருசாமி மற்றும் அந்தோணிசாமிக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் பேரில் திருவில்லிபுத்தூர் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீயை போராடி அணைத்தனர். இதனால் அருகே இருந்த குடியிருப்பு பகுதிக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
சிபிஐ அதிகாரிகளின் தொடர் ஆய்வால் பட்டாசு ஆலைகளை மூடிய உரிமையாளர்கள்
₹1.40 லட்சம் மதிப்பில் பன்றி வாங்கி மோசடி
புதுப்பட்டி பேரூர் திமுக செயலாளருக்கு சான்றிதழ்: அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வழங்கினார்
தாசில்தார்கள் பணியிடமாற்றம்
நகராட்சி கமிஷனர்கள் இடமாற்றம்
தேனி மாவட்டத்தில் குரூப் 2 தேர்வை நாளை 21,588 பேர் எழுதுகின்றனர்
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்