மொழிப்போர் தியாகிகள் உருவப்படங்களுக்கு முன்னாள் அமைச்சர் மலர்தூவி மரியாதை
1/26/2022 3:13:46 AM
சிவகாசி: மொழிப்போர் தியாகிகளின் உருவப்படங்களுக்கு முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மலர்தூவி மரியாதை செலுத்தினார். விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக மாணவரணி சார்பாக மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி சிவகாசி அருகே திருத்தங்கல் பாலாஜி நகரில் கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. விருதுநகர் மேற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் கதிரவன் தலைமை வகித்தார். மொழிப்போர் தியாகிகளின் உருவப்படங்களுக்கு முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து சாத்தூர் முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மன், திருத்தங்கல் நகர செயலாளர் பொன்சக்திவேல், சிவகாசி ஒன்றிய செயலாளர்கள் கருப்பசாமி, ஆரோக்கியராஜ், வெங்கடேஷ், சிவகாசி நகர செயலாளர் அசன்பதூரூதீன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச்செயலாளர் சீனிவாசபெருமாள், விருதுநகர் மேற்கு மாவட்ட விவசாய அணி செயலாளர் முத்தையா, விருதுநகர் மாவட்ட மாணவரணி இணை செயலாளர் முத்துராஜ், மாவட்ட மாணவரணி துணை செயலாளர்கள் திருப்பதிராஜ், தங்கராஜ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப செயலாளர் பாண்டியராஜன், தலைவர் செல்வம், சிவகாசி ஒன்றிய இளைஞரணி செயலாளர் சங்கர், நகர இளைஞரணி செயலாளர் கார்த்திக், சிவகாசி கிழக்கு இலக்கிய அணி செயலாளர் மாரிக்கனி, சிவகாசி நகர மாணவரணி செயலாளர் கரைமுருகன், திருத்தங்கல் நகர மாணவரணி செயலாளர் ஹரிஹரசுதன், மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
மேலும் செய்திகள்
சிபிஐ அதிகாரிகளின் தொடர் ஆய்வால் பட்டாசு ஆலைகளை மூடிய உரிமையாளர்கள்
₹1.40 லட்சம் மதிப்பில் பன்றி வாங்கி மோசடி
புதுப்பட்டி பேரூர் திமுக செயலாளருக்கு சான்றிதழ்: அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வழங்கினார்
தாசில்தார்கள் பணியிடமாற்றம்
நகராட்சி கமிஷனர்கள் இடமாற்றம்
தேனி மாவட்டத்தில் குரூப் 2 தேர்வை நாளை 21,588 பேர் எழுதுகின்றனர்
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்