பாதுகாப்பின்றி நிற்கும் பறிமுதல் வாகனங்கள்
1/26/2022 3:13:34 AM
ராஜபாளையம்: ராஜபாளையத்தில் போலீசால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பாதுகாப்பின்றி நிற்கின்றன. ராஜபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் குற்றச் செயல்கள் மற்றும் விபத்துக்குள்ளான வாகனங்கள் அளவுக்கு அதிகமாக தேங்கிக் கிடப்பதால் பாதுகாப்பதில் போலீசார் சிரமப்படுகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அனைத்தும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள இடம் இல்லாத காரணத்தினால் திருடு போகும் அபாயம் நிலவுகிறது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ராஜபாளையம் சுற்றுவட்டார பகுதியில பெருமளவிற்கு மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் ஆற்றுப் பகுதியில் மணல் திருட்டில் ஈடுபட்டதாக டிராக்டர்கள் மற்றும் வண்டிகளை பறிமுதல் செய்து பல ஆண்டுகளாக பாதுகாப்பற்ற நிலையில் பொதுமக்களுக்கு இடையூறாக வைத்துள்ளனர். மேலும் இந்த வாகனங்கள் பாதுகாப்பு இன்றி திருடு போகும் அபாயம் உள்ளது. இவ்வழக்குகளை உடன டியாக முடித்து வைத்து தீர்வு காண வேண்டும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
சிபிஐ அதிகாரிகளின் தொடர் ஆய்வால் பட்டாசு ஆலைகளை மூடிய உரிமையாளர்கள்
₹1.40 லட்சம் மதிப்பில் பன்றி வாங்கி மோசடி
புதுப்பட்டி பேரூர் திமுக செயலாளருக்கு சான்றிதழ்: அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வழங்கினார்
தாசில்தார்கள் பணியிடமாற்றம்
நகராட்சி கமிஷனர்கள் இடமாற்றம்
தேனி மாவட்டத்தில் குரூப் 2 தேர்வை நாளை 21,588 பேர் எழுதுகின்றனர்
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்