பட்டாசு தொழிலை காப்பாற்ற கோரிக்கை
1/26/2022 3:13:24 AM
சிவகாசி: சிவகாசி பட்டாசு தொழிலை காப்பாற்ற வலியுறுத்தி விருதுநகர் மாவட்ட பாஜக செய்தி தொடர்பாளர் பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். விருதுநகர் மாவட்ட பாஜக செய்தி தொடர்பாளர் ஆறுமுகம், பிரதமர் மோடிக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
சிவகாசியில் பட்டாசு தொழில் கடந்த 2 வருடங்களாக கோர்ட் உத்தரவின் காரணமாக முழுமையாக செயல்படவில்லை. பேரியம் நைட்ரேட் பயன்படுத்த கூடாது, சரவெடி பின்னகூடாது என கோர்ட் தடை விதித்துள்ளது. இதனால் விருதுநகர் மாவட்ட பட்டாசு தொழிலில் ஈடுபட்டுள்ள 9 லட்சம் பேர் பாதிப்படைந்துள்ளனர். மேலும் பட்டாசு உற்பத்தி சார்ந்த அச்சு தொழில், காகிதம் விற்பனை போன்ற உபதொழில்களும் பாதிப்படைந்துள்ளது. உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளிலும் பேரியம் நைட்ரேட் உபயோகம் செய்யப்படுகிறது. சங்கு சக்கரம், புஸ்வானம், வண்ணகலர் வெடி என அனைத்துவித பட்டாசுக்கும் பேரியம் நைட்ரேட் மூலப்பொருள் அவசியம்.
எனவே பட்டாசு தொழில் ெதாடர்ந்து செயல்பட உடனடியாக மாசுகட்டுப்பாடு வாரியம் மூலம் பேரியம் நைட்ரேட் உபயோகிக்கலாம் என்றும், 1000 வெடிகள் வரையிலான சரவெடி தயாரிக்கலாம் என்றும் சுப்ரீம் கோர்ட்ைட அணுகி அனுமதி வாங்கி தர வேண்டும். இவ்வாறு கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
சிபிஐ அதிகாரிகளின் தொடர் ஆய்வால் பட்டாசு ஆலைகளை மூடிய உரிமையாளர்கள்
₹1.40 லட்சம் மதிப்பில் பன்றி வாங்கி மோசடி
புதுப்பட்டி பேரூர் திமுக செயலாளருக்கு சான்றிதழ்: அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வழங்கினார்
தாசில்தார்கள் பணியிடமாற்றம்
நகராட்சி கமிஷனர்கள் இடமாற்றம்
தேனி மாவட்டத்தில் குரூப் 2 தேர்வை நாளை 21,588 பேர் எழுதுகின்றனர்
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்