கே.வி.குப்பம் தாலுகா அலுவலகத்தில் எருது விடும் விழா ஆலோசனை கூட்டம்
1/26/2022 12:19:40 AM
கே.வி.குப்பம், ஜன.26: கே.வி.குப்பம் தாலுகா அலுவலகத்தில் எருது விடும் திருவிழா ஆலோசனை கூட்டம் நடந்தது. கே.வி.குப்பம் தாலுகா அலுவலகத்தில் எருது விடும் திருவிழா தொடர்பான ஆலோசனை கூட்டம் சப்-கலெக்டர் தனஞ்செயன் தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது. மாவட்ட உதவி கலெக்டர் (பயிற்சி) ஐஸ்வர்யா ராமாநாதன் பங்கேற்று விழா குழுவினர்களுக்கு ஆலோசனை வழங்கினார். கூட்டத்தில், உள்ளூர் காளைகளுக்கு மட்டுமே பதிவு செய்து டோக்கன் வழங்க வேண்டும். வெளியூரில் இருந்து வரப்படும் காளைகளை அனுமதிக்க கூடாது. காளைகள் மீது பந்தயம் கட்டுதல் கூடாது. காளைகள் முன்கூட்டியே கால்நடை பராமரிப்பு துறையிடம் பரிசோதனை செய்து தகுதிச்சான்று பெற்ற வேண்டும். வாடிவாசலில் காளைகளின் உரிமையாளர்களை தவிர பார்வையாளர்கள் யாரையும் அனுமதிக்க கூடாது. குறைந்தபட்சம் 2 ஆம்புலன்ஸ் இருக்க வேண்டும். 150 பார்வையாளர்களுடன் மட்டுமே நடத்த வேண்டும். பார்வையாளர்கள் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். அரசின் வழிகாட்டுதலை கடைபிடித்து விழா நடத்த வேண்டும். விதிமீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதில், துணை தாசில்தார் பலராமன், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாஸ்கர், பிச்சாண்டி, விஏஓ கலைவாணி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
குடியாத்தம் அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம்
ேவலூர் மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு ஒருநாள் புத்தாக்க பயிற்சி எம்எல்ஏ, மேயர் பங்கேற்பு
திருவலம் பேரூராட்சியில் பணி நியமனம், வரிமேல் முறையீட்டுக் குழு உறுப்பினர் திமுகவினர் போட்டியின்றி தேர்வு
வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் இறந்தவர்களின் வாரிசுகள் நிவாரணத்திற்கு விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
கூட்டுறவு வங்கி பேரவைக்கூட்டம் குடியாத்தத்தில்
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம் பேரணாம்பட்டு ஆதிதிராவிட நல மேல்நிலைப்பள்ளியில்
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!