டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து திருடிய பிரபல கொள்ளையன் கைது: 110 மதுபாட்டில்கள் பைக் பறிமுதல்
1/26/2022 12:17:12 AM
சென்னை: ஜாபர்கான்பேட்டை கங்கையம்மன் கோயில் தெருவில் உள்ள டாஸ்மாக் கடையில் கடந்த 22ம் தேதி இரவு வியாபாரம் முடிந்ததும், கடையின் மேற்பார்வையாளர் கேசவன் பூட்டிவிட்டு ெசன்றார். மறுநாள் காலை கடையை திறக்க வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு, கடையில் இருந்த மது பாட்டில்கள் கொள்ளைபோனது தெரிந்தது. இதுபற்றி குமரன் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று விசாரணை நடத்தினர். அதில், கே.கே.நகர் அம்பேத்கர் காலனியை சேர்ந்த பிரபல கொள்ளையன் பிரகாஷ் (21), தனது நண்பர்களான ராஜேஷ், விக்னேஷ், வசந்த் ஆகியோருடன் சேர்ந்து, டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து மது பாட்டில்களை திருடிச் சென்றது தெரிந்தது. இதையடுத்து, பிரகாஷை நேற்று முன்தினம் கைது செய்தனர். விசாரணையில் இவர், சம்பவத்தன்று அசோக் நகர் பகுதியில் சாலையோரம் நிறுத்தி இருந்த பைக்கை திருடி வந்து, டாஸ்மாக் கடையில் கொள்ளையடித்துவிட்டு சென்றது தெரியவந்தது. கைதான பிரகாஷிடம் இருந்து 110 மதுபாட்டில்கள் மற்றும் பைக் பறிமுதல் செய்யப்பட்டது. தலைமறைவாக உள்ள ராஜேஷ், விக்கி, வசந்த் ஆகியோரை போலீசார் தேடி
வருகின்றனர்.
மேலும் செய்திகள்
மும்பையில் வாங்கி சென்னையில் விற்பனை; வாட்ஸ்அப் மூலம் போதை மாத்திரை ஊசி சப்ளை செய்த இருவர் கைது: 1300 மாத்திரை, 15 ஊசி பறிமுதல்
போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்: காவல்துறை அறிவிப்பு
சாலை தடுப்பில் பைக் மோதி மகன் பலி; தந்தை படுகாயம்
வாலிபரை கத்தியால் வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை பைக்கில் விரட்டி பிடித்த எஸ்ஐ: சினிமா பாணியில் பரபரப்பு சம்பவம்
கொடுங்கையூர் குப்பை கிடங்கில் தீ விபத்து: கண் எரிச்சல், சுவாசக்கோளாறால் மக்கள் அவதி
வயதை மறைத்து திருமணம் செய்யப்பட்ட சிறுமிக்கு குழந்தை பிறந்தது: போக்சோவில் கணவன் கைது
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்