இணையத்தில் முன்பதிவு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு தேசிய பெண் குழந்தைகள் தினத்தையொட்டி செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ஒரேநாளில் 40 குழந்தைகள் சேர்ப்பு
1/25/2022 3:10:55 AM
திருச்சி, ஜன.25: தேசிய பெண்குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அஞ்சல்துறையில் குழந்தைகள் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் 40 குழந்தைகளை சேர்த்து அவர்களுக்கு முதல்தவணையை அஞ்சல்துறையே செலுத்தி கணக்கு துவங்கியது.
தேசிய பெண் குழந்தைகள் தினத்தையொட்டி பெரிய மிளகுபாறை குழந்தைகள் மையத்தில் சமூக நலன் மகளிர் உரிமைத் துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில், அஞ்சல் துறையில் குழந்தைகள் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் சேர்க்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. மாவட்ட கல்வி அலுவலர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். பொன்மலை போலீஸ் இன்ஸ்பெக்டர் அசிம், முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் கணபதி சாமிநாதன், வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் காஞ்சனா, மனோகரன் உள்பட பலர் பங்கேற்றனர். இதில் அஞ்சல் துறை சார்பில், திட்டம்-1 உறையூர் வட்டாரத்தில் 8 குழந்தைகள் மையத்தை சேர்ந்த 40 பெண் குழந்தை பயனாளிகளுக்கு முதல் கட்டமாக இலவசமாக ரூ.250 பணம் கட்டி கணக்கு துவங்கினர். தொடர்ந்து அவர்கள் இந்த கணக்கில் மாதம்தோறும் தங்களால் இயன்ற தொகையை செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் கட்டிக்கொள்ளலாம். இது பெண் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு பேருதவியாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் செய்திகள்
மேகதாதுவில் அணை கட்ட அனுமதித்தால் தமிழகம் வரும்போது பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி
விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் எச்சரிக்கை: திருச்சி அதிமுக அலுவலகத்தில் ஓபிஎஸ் படம் அகற்றம், கிழிப்பு
வங்கியில் பணம் எடுத்து செல்வோரிடம் வழிப்பறி: வாலிபர் கைது: ரூ.4.80 லட்சம் மீட்பு
திருச்சியில் செல்போன், ரொக்க பணம் முகமுடி நபர்கள் வழிப்பறி
சிறுகமணியில் வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பூச்சி, நோய் மேலாண்மை பயிற்சி
திருச்சி பஞ்சப்பூர் ஜங்ஷனில் புதிதாக திறக்கப்பட்ட காவல் சோதனை சாவடியால் குற்ற சம்பவங்கள் குறைந்தது
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!