சென்னீர்குப்பம் ஊராட்சியில் சாலையில் தேங்கும் கழிவுநீர்
1/25/2022 3:05:01 AM
பூந்தமல்லி: பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பம் ஊராட்சியில் ஆவடி செல்லும் சாலை, சென்னீர்குப்பம் சந்திப்பு பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பகுதியில் பூந்தமல்லி நகராட்சியில் இருந்து வரும் கழிவுநீர் சாலையில் தேங்கி குளம்போல் தேங்கியுள்ளது.
இதனை அகற்ற வேண்டும் என பூந்தமல்லி நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை சென்னீர்குப்பம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இதுவரை நிரந்தரமாக கழிவுநீர் அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. அவ்வப்போது மின்மோட்டார்களை வைத்து கழிவுநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டாலும் தொடர்ந்து அந்த பகுதியில் கழிவுநீர் குளம்போல் தேங்கி இருப்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவி வருகிறது.
இந்நிலையில், சென்னீர்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் கோட்டீஸ்வரி அன்பு மற்றும் வார்டு உறுப்பினர்கள் பூந்தமல்லி நகராட்சி கமிஷனரை அவரது அலுவலகத்திற்கு நேற்று நேரில் சந்தித்து சென்னீர்குப்பம் பகுதியில் தேங்கும் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
மேலும் செய்திகள்
செங்குன்றத்தில் பயங்கரம்: முன்விரோத தகராறில் ரவுடி வெட்டி கொலை: 2 பேர் கைது
திருவள்ளூர் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 91.06% தேர்ச்சி
ராமாபுரத்தில் குடியிருப்புகளுக்கு பட்டா வழங்ககோரி தொடர் முழக்க போராட்டம்
பழவேற்காடு உப்பங்கழி ஏரியில் 37 மீனவ குடும்பங்கள் மீன்பிடிக்க செல்ல உரிய பாதுகாப்பு வழங்கப்படும்: போலீசார் உறுதி
எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கியும் வாடகை கட்டாத கடைகளுக்கு சீல்: மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி
திருவள்ளூர் அருகே அம்மன் கோயில்களை உடைத்து 24 சவரன், ரூ5 லட்சம் கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!