மகனுக்கு ரத்த அடைப்பினால் சிறுமூளை பாதிப்பு
1/25/2022 3:04:06 AM
கரூர், ஜன. 25: மகனுக்கு மருத்துவ நிதியுதவி வேண்டி கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா சாந்தப்பாடி கிராம பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவர் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் தெரிவித்துள்ளதாவது:
எனக்கு 17 வயதில் அரிவாசு என்ற மகன் உள்ளார். மகனுக்கு ரத்த அடைப்பின் காரணமாக சிறுமூளை பாதிப்பு ஏற்பட்டு, அரசு மருத்துவமனையில் போதிய சிகிச்சை இல்லாததால், மருத்துவர்களின் அறிவுரையின்பேரில், கோவை தனியார் மருத்துவமனையில் சேர்த்து இதுவரை 30 லட்சத்துக்கு மேல் கடன் வாங்கி சிகிச்சை அளித்து வருகிறேன். சிகிச்சை காரணமாக மகனின் உடலில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், மகனை காப்பாற்ற வேண்டும் என்றால் மேலும் சிகிச்சை அவசியம் என கூறப்படுகிறது. சக்திக்கு மீறி கடன் வாங்கி செலவழிப்பது என்பது சாத்தியமில்லாத நிலையில் உள்ளேன். எனவே, மகனை காப்பாற்ற மருத்துவ நிதியுதவி செய்து தர வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
சீருடை பணியாளர் தேர்வாணைய சார்பு ஆய்வாளர் பணிக்கு எழுத்து தேர்வு
தினமும் மாலையில் தோகைமலையில் ஆசிரியர்களுக்கு ஆங்கில பேச்சுத்திறன் : வளர்த்தல் குறித்த பயிற்சி
கரூரில் முதன்முறையாக துவக்கம்; கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்: அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார்
நகராட்சியை பசுமையாக மாற்ற புகளூர் பெண்கள் பள்ளியில் மாணவிகள் விழிப்புணர்வு உறுதிமொழி
கரூர் தபால் தந்தி அலுவலகம் முன் அக்னிபாத் திட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
2 வார விடுமுறைக்கு பிறகு கரூர் மாவட்டத்தில் 1041 பள்ளிகள் திறப்பு
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!